முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.7500 கோடியில் 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டம்


செவ்வாய் 15, மார்ச் 2022 



தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் "கதி சக்தி" திட்டத்தின் கீழ் ரூ.7500 கோடியில், 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. 


இது தொடர்பாக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன், சுங்கத்துறை ஆணையர் தினேஷ் கே.சக்கரவர்த்தி, வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் துணைத் தலைவர் பீமல்குமார், தென்னக ரயில்வே மதுரை கோட்ட மூத்த வர்த்தக துணை மேலாளர்  பிரசன்னா, தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்ரமணியன், இந்திய துறைமுக ரயில்  கழக வர்த்தக வளர்ச்சி உதவி பொது மேலாளர் ரமேஷ் பாபு, தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சங்கர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 


அப்போது வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் கூறியதாவது "தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பிரதமரின் கதி சக்தி என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. தற்போது வெளித் துறைமுக திட்டத்தில் ரூ.7500 கோடி மதிப்பில் ஆயிரம் மீட்டர் நீளத்துடன் கூடிய 2 சரக்கு பெட்டக முனையம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மூலம் 18 மீட்டர் ஆழம் கொண்ட கப்பல்களை கையாள முடியும். இதன் மூலம் துறைமுக ஆணையத்துக்கு 4.10 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை கையாளுவதற்கான கொள்முதல் உருவாக்கப்படும்.


இந்த திட்டத்தின் மூலம் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சரக்குப் பெட்டகங்கள் கொள்ளவுடைய பெரிய கப்பல்களை  கையாள முடியும். பொது, தனியார் கூட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதோடு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும். கடலோர வேலைவாய்ப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக 965 ஏக்கர் நிலப்பரப்பை வ.உ.சி. துறைமுகம் ஒதுக்கி உள்ளது. இதில் 745 ஏக்கர் நிலப்பரப்பு குத்தகைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.


வ.உ.சி. துறைமுக ஆணையத்துக்கு தேவையான தண்ணீரில் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் மூலம் 3 மில்லியன் லிட்டரை பெற்று வருகிறது. மேலும் வாழவல்லான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து 750 கிலோ லிட்டர் குடிநீரையும், மங்களக்குறிச்சியில் உள்ள துறைமுகத்திற்கு சொந்தமான நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 1400 கிலோ லிட்டர் குடிநீரையும் பெற்று வருகிறது. 2025-ம் ஆண்டில் துறைமுகத்தின் தண்ணீர் தேவையானது 6.30 மில்லியன் லிட்டர்  என கணக்கிடப்பட்டுள்ளது. 


எனவே எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு துறைமுக நிலையத்தில் ரூ.144 கோடி செலவில் 5 மில்லியன் லிட்டர் உப்புநீரை நன்னீராக்கும் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. ரயில் சரக்குப்பெட்டிகளில்  உள்ளேயும், வெளியிலும் எடையை கண்காணிப்பதற்காக ரூ.23 லட்சம் செலவில் 140 மெட்ரிக் டன் மின்னணு ரயில் எடை பார்க்கும் செயலி துறைமுக ரயில் மார்செல்லிங் சேமிப்பு கிடங்கில் நிறுவப்பட்டுள்ளது என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்