தேசிய அளவிலான பென்சாக் சிலாட் போட்டிக்கு தகுதி பெற்ற சாய் இன்டர்நேஷனல் அகாடமி வீரர்களுக்கு பாராட்டு விழா.

 



தேசிய அளவிலான பென்சாக் சிலாட் போட்டிக்கு தகுதி பெற்ற சாய் இன்டர்நேஷனல் அகாடமி வீரர்களுக்கு பாராட்டு விழா. 


மார்ச் 11 தேதி முதல் 14 தேதி வரை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஜிஹெச்ஜி கால்சா கல்லூரியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான சீனியர் பென்சாக் சிலாட் போட்டிக்கு தேர்வு பெற்ற தமிழக  அணியின் தூத்துக்குடி வீரர்கள்  செய்யது சாகில் (45-50),சூர்யா ராம்(75-80), சதீஷ்குமார்(80-85) அந்தோணி ஜான் ரோபிஸ்(90-95), ஹசீனா பேகம்(45-50), சிந்து  (50-55) மற்றும் கண்டா பிரிவில் தேர்வு பெற்ற தங்க ராஜசேகர் ஆகியோர்களுக்கு பாராட்டுவிழா அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.


 இவ்விழாவில் அழகப்பா பல்கலைக்கழக  ஒருங்கிணைப்பாளர்  கதிரேசபாண்டியன், டாக்டர் பச்சைமால், லயன் ராமகிருஷ்ணன் மற்றும் சாய் இன்டர்நேஷனல் அகாடமி தலைமை பயிற்சியாளர் முத்து சங்கர் குமார் ஆகியோர் வெற்றிபெற்ற வீரர்களையும் பயிற்சியாளர் கபிரியேல் சாலமோன் ,சுடலை கண் ஆகியோரையும்  பாராட்டி கௌரவித்தனர். 


விழா ஏற்பாடுகளை சாய் இன்டர்நேஷனல் அகாடமியின் பயிற்சியாளர்  காஜா ரகுமான் செய்திருந்தார்.




கருத்துகள்