மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை ஜிம்னாஸ்டிக் பள்ளி மாணவர்கள் சாதனை

 மாஸ்டர் ஆர்கே பறக்கும்படை ஜிம்னாஸ்டிக் பள்ளி மாணவர்கள் சாதனை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ லலிதா வித்யாலயா பள்ளியில்   கடந்த   17-4-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மாஸ்டர் ஆர்கே பறக்கும் படை ஜிம்னாஸ்டிக் பள்ளியை சேர்ந்த நாற்பத்தி ஆறு மாணவ மாணவிகள் ஒன்றரை கிலோமீட்டர் ( Cartwheel ) அடித்து வேர்ல்டு ஐகான் அவார்டு மூலமாக புதிய உலக சாதனை படைத்தனர்


இந்த உலக சாதனை போட்டியை  புதுக்கோட்டை  காவல் ஆய்வாளர்  உயர் திரு. ரமேஷ் அவர்கள் துவக்கி வைத்து மாணவர்கள்  இன்னும்  இது போன்ற பல சாதனை படைக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தி  வாழ்த்தி பேசினார் 

  இந்த சாதனை போட்டியில்  4 வயது முதல் 12 வயது முதல் உள்ள மாணவ மாணவிகள் ஜிம்னாஸ்டிக் 10 புதுவிதமான உலக சாதனைகள் வேர்ல்டு ஐகான் அவார்டு மூலமாக நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு மாஸ்டர் ஆர்கே அவர்கள் செய்திருந்தார்

 இந்த  நிகழ்ச்சிக்கு சிவசேனா கட்சித் தலைவர் திரு கோமதி ராஜ் அவர்கள் தலைமை தாங்கினார்



 இந்த போட்டியில்  கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு குரோஸ்கி நிறுவனம் சார்பாக டீசர்ட் வழங்கப்பட்டது ஸ்பைஸ் மீடியா சார்பாக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது 

இந்நிகழ்ச்சியில் அமைப்பாளர்கள்  செயலாளர் டாக்டர் கிருத்திகா அவர்கள் துணைதலைவி திருமதி.லிங்க சடச்சி அவர்கள் மாஸ்டர் .எஸ் ஆனந்த் அவர்கள் மாஸ்டர். A.மாரிச்செல்வம்  P.T மாஸ்டர் .ரஞ்சித் குமார் அவர்கள் திருமதி .அருள்ஜோதி அவர்கள் அனைவரும் இணைந்து ஏற்பாடு செய்தனர் 

 இவர்கள் அனைவரையும் டாக்டர் .விக்னேஷ், அட்வகேட் பொன் இசக்கி பாண்டியன்  அவர்கள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்



கருத்துகள்