முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலக ஓவியர்தினத்தில் - ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவியக் கலைக் காட்சி

 



உலக ஓவியர்தினம் - ஓவியப் பயிற்சி முகாம் மற்றும் ஓவியக் கலைக் காட்சிகள் நடத்துதல்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு

                தூத்துக்குடி மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் வாயிலாக  6 வயது முதல் 16 வயது வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில்; சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், மற்றும் கராத்தே ஆகிய கலைகளில பகுதி நேரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

                தமிழகம் முழுவதும் செயல்படும் ஜவகர் சிறுவர் மன்றங்கள் வாயிலாக உலக ஓவியர் தினத்தன்று  ஓவிய பயிற்சி பட்டறை நடத்திடவும் அதனை தொடர்ந்து சென்னையில் மாநில அளவிலான கலைக்காட்சி நடத்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்ஓவியப்பயிற்சி முகாம்களில் மரபுசார்ந்த ஓவியங்கள் துணி ஓவியங்கள், கண்ணாடி ஓவியங்கள், பேப்பர் ஓவியங்கள், பானை, மரம் ஓவியங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள் உள்ளிட்ட ஓவியங்களும் இடம்பெறும் வகையில்; நடத்தப்படவுள்ளது.   இம்முகாம் தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில்; வருகின்ற 24-04-2022 (ஞாயிற்றுகிழமை)  அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பிற்பகல் 3.00 மணிக்கு மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றில்; தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஓவியங்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் காட்சிக்கு வைக்கப்படும். 

மேலும், கலந்து கொள்ளும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி பொருட்கள், பயிற்சி சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.   இவ்வாய்ப்பினை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கலையார்வமிக்க மாணவ மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.,  அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்