மூளை முடக்கு குறைபாடு தேசிய அளவிலான தடகளப் போட்டி நியூ டெல்லி ஜவர்கலால் நேரு ஸ்டேடியத்தில் கடந்த 4.5.2022 முதல் 07.5.2022. வரை நடைபெற்றது
இதில் தமிழ்நாடு சார்பாக 10 பேருகள் கலந்து கொண்டனர் இதில் தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் கற்குவேல் குண்டு எறிதலில் முதலிடமும் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடமும் பாண்டியராஜன் 1500 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பிடித்து தமிழ்நாட்டுக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்
வெற்றி பெற்ற மாணவர்களை தூத்துக்குடி மாவட்ட மூளை முடக்குவாதம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட மூளை முடக்குவாதம் சங்க செயலாளர் மாஸ்டர் திரு ஸ்டீபன் அவர்கள் மற்றும் தலைவி திருமதி ஜெயலட்சுமி அவர்கள், துணை தலைவி ஷாலி, அவர்கள் மற்றும் பொருளாளர் திரு பத்மநாதன் அவர்கள் ,துணைச் செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
வெற்றி பெற்ற இம் மாணவர்கள் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது
கருத்துகள்
கருத்துரையிடுக