தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி கிளை சார்பாக செயற்குழு கூட்டம் 28-5-2022 அன்று சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி விவிடி வாட்டர் டேங்க் (விவிடி பூங்கா) அருகில் நடைபெற்றது
ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி மாநகரத் தலைவர் திரு ஆர் மாடசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு முன்னாள் என்.ஜி.ஓ தலைவர் அந்தோணிசாமி மற்றும் முன்னாள் செயலாளர் A. ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
துத்துக்குடி பகுதியிலிருந்து நகராட்சி மற்றும் மாநகராட்சி ஒய்வூதியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஓய்வூதியர்களின் சேமநல நிதி வட்டி நகராட்சி – மாநகராட்சி- அலுவலர்கள் ஊழியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்த மாநகராட்சி மேயர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி சாய் ஸ்ரீ I.A.S அவர்களுக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கப்பட்டது
சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா 2022 செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டையை நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் உடனடியாக வழங்க இயக்குனர் உள்ளாட்சி நிதி தனிக்கை துறையினர் அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது , போன்ற தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது
மேலும் இந்த கூட்டத்தில் ஓய்வூதியர் சங்க திரு அந்தோணிசாமி அவர்களும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆறுமுக நயினார், M. ராசாமணி, S.தயாளசிங் G.S.இஸ்ரவேல் , V. தங்கச்சாமி
S.சண்முகவேல், திருமதி மேரி, திருமதி அலீஸ் அன்பு , செல்லப்பன் S. கோபால் , K. செல்வராஜ், ஜெயசீலன் , திருமதி முனியம்மாள் , அந்தோணியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக