முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி கிளை சார்பாக செயற்குழு கூட்டம்

 



தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி கிளை சார்பாக செயற்குழு கூட்டம் 28-5-2022  அன்று சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி விவிடி வாட்டர் டேங்க் (விவிடி பூங்கா) அருகில் நடைபெற்றது    


ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி மாநகரத் தலைவர் திரு ஆர் மாடசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு முன்னாள் என்.ஜி.ஓ தலைவர்  அந்தோணிசாமி  மற்றும் முன்னாள் செயலாளர் A. ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்




துத்துக்குடி பகுதியிலிருந்து நகராட்சி மற்றும்  மாநகராட்சி ஒய்வூதியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்  ஓய்வூதியர்களின் சேமநல நிதி வட்டி நகராட்சி – மாநகராட்சி- அலுவலர்கள் ஊழியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்த மாநகராட்சி மேயர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி சாய் ஸ்ரீ I.A.S அவர்களுக்கும்  நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கப்பட்டது 



சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா  2022 செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டையை நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் உடனடியாக வழங்க இயக்குனர் உள்ளாட்சி  நிதி தனிக்கை   துறையினர் அவர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது , போன்ற தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது


மேலும் இந்த கூட்டத்தில் ஓய்வூதியர் சங்க திரு அந்தோணிசாமி அவர்களும் ஓய்வு  பெற்ற அரசு ஊழியர் ஆறுமுக நயினார்,                   M. ராசாமணி,  S.தயாளசிங்  G.S.இஸ்ரவேல் , V. தங்கச்சாமி 

S.சண்முகவேல்,  திருமதி மேரி, திருமதி அலீஸ் அன்பு , செல்லப்பன் S. கோபால் , K. செல்வராஜ், ஜெயசீலன் , திருமதி முனியம்மாள் , அந்தோணியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்