தூத்துக்குடி இரயில் நிலையத்தில் ஒன் ஸ்டேசன் - ஒன் புராடைக்ட் திட்டம் துவக்கம்

 



இந்திய ரயில் நிலையங்களில் பூகோள ரீதியான சிறப்பு வாய்ந்த பொருள்களை பிரபலப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஒன் ஸ்டேஷன் ஒன் புராடைக்ட் என்ற அடிப்படையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன் சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி 23-06-2022 வியாழன்  அன்று மாலை  தூத்துக்குடி ரயில் நிலையத்தில்  தொடங்கப்பட்டது



இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரயில் நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் திரு சி நடராஜன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளர் திரு செந்தில்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரயில் நிலைய அதிகாரி சுதர்சன் தாஸ் மற்றும் முன் பதிவு அதிகாரி திரு P. ரமேஷ் அவர்களும் மற்றும் ரயில்வே ஓய்வுபெற்ற முதன்மை எழுத்தாளர் திரு. G ராமராஜ் மற்றும்  தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய. சாந்தி பேக்கரியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்



கருத்துகள்