முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் புதிய பேருந்து நிலைய சாந்தி பேக்கரியின் மக்ரோன் ஸ்டால் திறப்பு : பொதுமக்கள் மகிழ்ச்சி வரவேற்பு

 


இந்திய ரயில் நிலையங்களில் பூகோள ரீதியான சிறப்பு வாய்ந்த பொருள்களை பிரபலப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஒன் ஸ்டேஷன் ஒன் புராடைக்ட் என்ற அடிப்படையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன் சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி 16-07-2022 சனிகிழமை   மாலையில் அன்று   தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டது




இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் திரு சி. நடராஜன் அவர்கள் ,      தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன்  ஸ்டால்லை தொடங்கி வைத்தார்கள்


இவ் நிகழ்ச்சியில் தூத்துக்குடி இரயில் நிலைய அதிகாரி நாதலால் மீனா -  துணை வணிக மேலாளர் செண்பகராஜ்  மற்றும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய. சாந்தி பேக்கரியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

இந்த மக்ரூன் ஸ்டால் 16-07-2022 முதல்  30-07-2022  வரையில மட்டும் இயங்கும்.  இது 15 நாட்களுக்கு ஒரு முறை  சங்கிலி தொடர் போல்  தொடரும் என  வர்த்தக முதன்மை ஆய்வாளர் திரு.C. நடராஜன் தெரிவித்தார்

தூத்துக்குடி மக்ரூன் என்றால் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் செல்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் ரயில் பயணிகள் வெளியூர் செல்லும் பொழுது தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மக்ருன் வாங்கி செல்வது வழக்கம் பயணிகள் வெளியூர் செல்லும் பொழுது அவசர அவசரமாக ரயில் நிலையம் வந்தாலும் கூட தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மக்ரூன் ஸ்டால் ரயில் நிலையத்திலே இருப்பதால் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் இரண்டு நாட்களாக ரயில் நிலையத்தில் உள்ள சாந்தி பேக்கரி ஸ்டாலில் மக்ரூன் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்  ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட இந்த மக்ரோன் ஸ்டால் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்