தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில். மக்கள் குறை தீர்க்கும் நாள்




மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாதத்தின் மூன்றாவது புதன் கிழமையான இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


தமிழக அரசு உத்தரவுப்படி இரு வாரங்களுக்கு ஒருமுறை முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 




அதன்படி இம்மாதத்தின் மூன்றாவது புதன் கிழமையான இன்று (20.07.2022) தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் 20 நபர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்களிடம் நேரடியாக தெரிவித்;து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

கருத்துகள்