முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி

 



தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும்  புல் பாக்சிங்  கிளப் சார்பில் தென் மண்டல அளவிலான போட்டி சோரீஸ் புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து கடந்த. 28-8-2022     ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெற்றது

இந்தப் போட்டிகளை டாக்டர் ஜாஸ்மின் ராஜேஷ் ,மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ஜெயரத்தின ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் 


அய்யனடைப்பு பஞ்சாயத்து தலைவர் அதிர்ஷ்ட கணபதி, ராஜேந்திரன் வழக்கறிஞர் லாரன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர் 

இந்த போட்டிகள்  தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மதுரை விருதுநகர் திருச்சி ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 250 க்கு மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்றனர்

மண்டல அளவிலான நடைபெற்ற இப் போட்டியில் 92 கிலோ ஹெவி வெயிட் பிரிவில் தூத்துக்குடி அபிஷேக் போல் சீலன் முதலிடம் பெற்று சாதனை படைத்தார் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பின் முதலிடம் விருதுநகர் இரண்டாவது இடத்தை கன்னியாகுமாரி மற்றும் மூன்றாவது இடத்தை தூத்துக்குடி பிடித்தது,  இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட  ஏ .எஸ் பி .சந்தீஷ்  அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்


இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் ஜெபா, தமிழ்நாடு காவல்துறை மூத்த குத்துச்சண்டை பயிற்சியாளர் ராஜலிங்கம், மற்றும் சமூக ஆர்வலர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜேஷ் முருகையா பாண்டியன், சுப்புராஜ் ஞானதுரை ,பாலாஜி, இசக்கி ராஜா ஸ்டீபன் மற்றும் மதன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்