தூத்துக்குடியில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி

 



தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகம் மற்றும்  புல் பாக்சிங்  கிளப் சார்பில் தென் மண்டல அளவிலான போட்டி சோரீஸ் புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து கடந்த. 28-8-2022     ஞாயிற்றுக்கிழமை  அன்று நடைபெற்றது

இந்தப் போட்டிகளை டாக்டர் ஜாஸ்மின் ராஜேஷ் ,மாவட்ட விளையாட்டு நல அலுவலர் ஜெயரத்தின ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தார்கள் 


அய்யனடைப்பு பஞ்சாயத்து தலைவர் அதிர்ஷ்ட கணபதி, ராஜேந்திரன் வழக்கறிஞர் லாரன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர் 

இந்த போட்டிகள்  தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி மதுரை விருதுநகர் திருச்சி ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 250 க்கு மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கு பெற்றனர்

மண்டல அளவிலான நடைபெற்ற இப் போட்டியில் 92 கிலோ ஹெவி வெயிட் பிரிவில் தூத்துக்குடி அபிஷேக் போல் சீலன் முதலிடம் பெற்று சாதனை படைத்தார் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பின் முதலிடம் விருதுநகர் இரண்டாவது இடத்தை கன்னியாகுமாரி மற்றும் மூன்றாவது இடத்தை தூத்துக்குடி பிடித்தது,  இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட  ஏ .எஸ் பி .சந்தீஷ்  அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள்


இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை பவுலின் ஜெபா, தமிழ்நாடு காவல்துறை மூத்த குத்துச்சண்டை பயிற்சியாளர் ராஜலிங்கம், மற்றும் சமூக ஆர்வலர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

போட்டிக்கான ஏற்பாடுகளை ராஜேஷ் முருகையா பாண்டியன், சுப்புராஜ் ஞானதுரை ,பாலாஜி, இசக்கி ராஜா ஸ்டீபன் மற்றும் மதன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்


கருத்துகள்