முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மரியாதை

 தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வு ஊழியர் சங்க சார்பாக முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த நாளில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை   

 


காஞ்சிபுரம் நகராட்சி முன்னாள் எழுத்தரும்  , முன்னாள் தமிழக முதல்வருமான பேரறிஞர் அண்ணா அவர்களால் நகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு முதன் முதலில் ஓய்வு ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்தமைக்காக தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் தூத்துக்குடி கிளை சங்க சார்பாக 15-9-2022 வியாழன்  அன்று தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள்  தூத்துக்குடி கிளைச் சங்க தலைவர் திரு இரா மாடசாமி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது



இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் திருமதி எஸ் மேரி,  பொருளாளர் M. தயாள சிங் ,  செயலாளர் P. ஜெயசீலன், இணை செயலாளர் M. ராஜ் , துணை செயலாளர் S. சண்முகவேல் N.G.O சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் C. ஆனந்தன் மற்றும் கமிட்டி மெம்பர்கள் K. செல்வராஜ் , தங்கசாமி . ஓய்வு பெற்ற நகராட்சி மேலாளர் R. ராமசாமி , மற்றும் ஊடக - விளம்பரச் செயலாளர்  E.சிவகாமிநாதன்  ஆகியோர் கலந்து கொண்டனர் .


நகராட்சி மற்றும் மாநகராட்சி ஒய்வூதியர்கள்  தாங்கள் பெற்று வருகின்ற  ஒய்வூதியம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெரும் முயற்சியால் கிடைக்கப்பெற்றது என்பதை மனதில் கொண்டு தங்களது நன்றி கடன் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்  பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில்  அவரது சிலைக்கு தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள்  தூத்துக்குடி கிளைச் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடதக்கது .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்