நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவ சிலைக்கு மரியாதை
தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வு ஊழியர் சங்க சார்பாக முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114வது பிறந்த நாளில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காஞ்சிபுரம் நகராட்சி முன்னாள் எழுத்தரும் , முன்னாள் தமிழக முதல்வருமான பேரறிஞர் அண்ணா அவர்களால் நகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு முதன் முதலில் ஓய்வு ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்தமைக்காக தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் தூத்துக்குடி கிளை சங்க சார்பாக 15-9-2022 வியாழன் அன்று தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் தூத்துக்குடி கிளைச் சங்க தலைவர் திரு இரா மாடசாமி அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் திருமதி எஸ் மேரி, பொருளாளர் M. தயாள சிங் , செயலாளர் P. ஜெயசீலன், இணை செயலாளர் M. ராஜ் , துணை செயலாளர் S. சண்முகவேல் N.G.O சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் C. ஆனந்தன் மற்றும் கமிட்டி மெம்பர்கள் K. செல்வராஜ் , தங்கசாமி . ஓய்வு பெற்ற நகராட்சி மேலாளர் R. ராமசாமி , மற்றும் ஊடக - விளம்பரச் செயலாளர் E.சிவகாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
நகராட்சி மற்றும் மாநகராட்சி ஒய்வூதியர்கள் தாங்கள் பெற்று வருகின்ற ஒய்வூதியம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெரும் முயற்சியால் கிடைக்கப்பெற்றது என்பதை மனதில் கொண்டு தங்களது நன்றி கடன் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் அவரது சிலைக்கு தூத்துக்குடி நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் தூத்துக்குடி கிளைச் சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது .
கருத்துகள்
கருத்துரையிடுக