முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடி 3ம் கேட் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு

 


தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3ம் கேட் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு 

-----------------------

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 3ம் கேட் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.10.2022) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 3ம் கேட் பாலம் என்பது மிகவும் சிக்கலான பாலம். இந்த பாலமானது தூத்துக்குடி ரயில்வே கேட்டுக்கு வடபுறமும், தென்புறமும் இணைக்கக்கூடியது. இந்த பாலத்தினை நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகிறார்கள்.  இந்த பாலத்தில் மொத்தம் 12 டெக்குகள் உள்ளது. ஓவ்வொரு டெக்குக்கும் இடையே இணைப்பு உள்ளது. இதில் ரயில்வே பாலத்துக்கு மேல் உள்ள 2 டெக்குகள் பழுதடைந்து சீல்; செய்யும் நிலை ஏற்பட்டது. இப்பழுதினை கண்டுபிடித்து கடந்த 2ம் தேதியில் இருந்து சீரமைப்பு பணியை செய்து வருகிறார்கள். பணிகள் முடிந்துவிட்டது. இரண்டு இணைப்புகளுக்கு இடையே ரப்பர் பொறுத்தப்பட்டு நாளைக்கு இரவு போக்குவரத்து சரி செய்யப்பபடும். பொதுமக்களின் வசதிக்காகவும், சாலை பாதுகாப்பையொட்டியும் மிக விரைவாக செய்து முடித்திருக்கிறோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


ஆய்வில் கோட்டப்பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை பொறி.ஆறுமுகநயினார், உதவி கோட்ட பொறியாளர் பொறி.திருவேங்கட ராமலிங்கம், உதவி பொறியாளர் பொறி.ஜெயஜோதி தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு.சு.சிவசுப்பிரமணியன், வட்டாட்சியர் திரு.செல்வக்குமார், ஆகியோர் கலந்துகொண்டனர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்