நாசரேத் கராத்தே வீரருக்கு வீரக்கலை வித்தகர் விருது.
20-10-2022 வியாழக் கிழமையன்று தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள மூக்குபேரி கிராமத்தில். . கிராமப்புற தமிழ் மன்றத்தின் சார்பாக மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.
இந்த மாதாந்திர கூட்டத்திற்கு தமிழ் மன்ற நிறுவனர் கவிஞர் தேவதாசன் வரவேற்பு உரையாற்ற தமிழ் மன்ற பணியாளர் அரிமா வி.வி.ன் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார் .
தமிழ் மன்றத்தின் சார்பாக நாசரேத் பகுதியில் உள்ள மாணவ, மாணவியற் களுக்கு தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் போன்ற கலைகளில் சிறப்பான பயிற்சியளித்து மாவட்ட, மாநில, மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்து , வெற்றியை பெற செய்த ஆலன் திலக் கராத்தே பள்ளி மாஸ்டர் டென்னிசன் அவர்களுக்கு வீரக்கலை வித்தகர் என்ற விருது வழங்கப்ட்டு கௌரவிக்கப்பட்டது
டென்னிசன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார். நிறைவாக தமிழ் மன்ற பணியாளர் முனைவர் மோசஸ் தயான் நன்றி கூறினார். மூக்கு பேரி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக