தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா ஆரம்பம்



                            

 நாள்.22.10.2022

தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக 

புத்தகத் திருவிழா – 2022 நவம்பர் 22 முதல் நவம்பர் 30 வரை நடைபெறவுள்ளது 

மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.


-------------------------------

தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகத் திருவிழா – 2022, நவம்பர் 22 முதல் நவம்பர் 30 வரையில் (22.11.2022  -30.11.2022) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


 புத்தகத் திருவிழா – 2022 தொடர்பான இலச்சினையை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப. அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெஜெகன் அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகையா அவர்கள், மாநகராட்சி ஆணையர் திருமதி.சாருஸ்ரீ, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (22.10.2022) வெளியிட்டார்கள் 


மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனைவரும் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இந்தப் புத்தகத் திருவிழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறும். சுமார் 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெறவுள்ளன. 


அதேபோல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாக சிறப்பு அரங்குகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. 

புத்தகம் வாசிப்பது என்பது மிகவும் அற்புதமான பழக்கம். 

பாடப் புத்தகங்களை தாண்டி பிற துறை சார்ந்த புத்தகங்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து அரிய தகவல்களையும் கற்றறிந்து பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 


இந்த புத்தக திருவிழாவினை பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் என அனைவரும் முழுமையாக பயன்படுத்தி புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.



கருத்துகள்