1-12-22 வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் அமைந்துள்ள இந்து அரிசனதுவக்கப் பள்ளியில் வைத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா பயிற்சி நிலைய மருத்துவர் உயர்திரு திருமுருகன் அவர்கள் தலைமையில் காந்திநகர் இந்து அரிஜன பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு மருத்துவ குழுவினர்களோடு வந்து இங்கு பயிலும் குழந்தைகளுக்கு இயற்கை மருத்துவத்தையும் ,யோகா பயிற்சியையும் விளக்கமாக எடுத்துரைத்து , செய்முறை பயிற்சியை நடத்தி காட்டினார்கள்
இந்த பயிற்சியில் பள்ளி குழந்தைகள் மிகுந்த ஆர்வத்தோடும், மன மகிழ்வோடும் பங்கேற்றனர்
நடைபெற்ற இந்நிகழ்ச்சி மிகவும் சிறப்பானதாகவும் , பயனுள்ளதாகவும் இருந்தது
எனவே இயற்கை மருத்துவ குழுவினருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாகத்தினருக்கும் இப்பள்ளியின் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் இங்கு பயிலும் குழந்தைகள் சார்பாகவும் தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்
கருத்துகள்
கருத்துரையிடுக