நண்பர்கள் குழு நடத்திய மெகா கோலப் போட்டி -




தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 வது வார்டு பகுதியில் நண்பர்கள் குழு சார்பாக ஆண்டு தோறும் பொங்கல் தினத்தை முன்னிட்டு மெகா கோலப்போட்டி  நடத்தி வருகிறார்கள்

அதேபோல் இந்த  வருடமும் நடைபெற்ற இந்த மெகா கோலப்போட்டிக்கான  பரிசு வழங்கும் நிகழ்ச்சி 22-1-2023  ஞாயிற்று கிழமை அன்று  மாலையில் தூத்துக்குடி  38வது வார்டு பகுதியில் உள்ள  குமார தெருவில் நடைபெற்றது

இந்த போட்டிக்கு அரசு மலர் நாளிதழின் தூத்துக்குடி மாவட்ட நிருபர் திரு ஆ ஷேக் மைதீன் அவர்கள் தலைமையில் , தமிழ்நாடு வ. உ. சி மாநில பேரவை தலைவர் திரு. செல்வ மாரியப்பன் அவர்கள் முன்னிலை வகிக்க , தூத்துக்குடி மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு B. ஐயப்பன் அவர்களும்,மற்றும் மத்திய பாக காவல் உதவி ஆய்வாளர் திரு. முருகப்பெருமாள்  அவர்களும்,  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோல போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்


முதல் பரிசாக தங்க நாணயமும், இரண்டாம் மற்றும் - மூன்றாம் பரிசாக வெள்ளி நாணயமும், கோலபோட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும்  நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி டவுன் விஏஓ திரு ச பரமேஸ்வரி அவர்களும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க செயலாளர் திருமதி J .சேவியர் அம்மாள் அவர்களும், அ.ம.மு.க வின் தூத்துக்குடி  சண்முகபுரம்  பகுதி துணைச் செயலாளர் திருமதி எஸ் விஜயகுமாரி அவர்களும், ராம குணசீலன் அவர்களும் , H.M.S கௌரவத் தலைவர் ஓம் சக்தி M. சங்கர் அவர்களும், சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்கள்

நிறைவாக  க. சுப்பையா பாண்டியன், C. முருகன் ஆகியோ நன்றியுரை ஆற்றினார்கள், தூத்துக்குடி 38 ஆவது வார்டு நண்பர்கள் குழு சார்ந்த  B.சங்கரசுப்பு B.A , பாஸ்கர், உரிகுசேன் அலி, பாலா, குமார் ஆகியோர் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கினார்கள்


 

கருத்துகள்