சிங்கப்பூரில் நடைபெற்ற சிலம்பு போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கங்களை வென்றனர்.
சிங்கப்பூரில் செயின்ட் ஜார்ஜ் அவன்யூலில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா ,போன்ற நாடுகளில் இருந்து 180 கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாணவர்கள் மதுமிதா இரட்டை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் , சிவக்குமார் ஒற்றை கொம்பு சுற்றில் தங்கப்பதக்கமும் வென்றனர். இந்த போட்டியில் கலந்து கொள்ள ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசன் சிறப்பான பயிற்சிகளை அளித்துள்ளார்
தாயகம் திரும்பி திருச்செந்தூர் வந்தடைந்த வெற்றி பெற்ற வீரர்களுக்கு திருச்செந்தூர் ரயில்வே நிலையத்தில் பொதுமக்கள் வரவேற்று மாணவ மாணவிகளையும் மற்றும் மாஸ்டரையும் வாழ்த்தி பாராட்டினார்கள்



கருத்துகள்
கருத்துரையிடுக