சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

 

 


*தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.*


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 11-03 - 2023 வெள்ளியன்று தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் இணைந்து மகளிர் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்  போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில்  நடைபெற்றது 

 


நடந்த இந்த போட்டிகளை தூத்துக்குடி மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஆண்டனி அதிர்ஷ்டராஜ், தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்க தலைவர் மலர்விழி , தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் முஹம்மது நசீர், ரோட்டரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளைச் சேர்ந்த மகளிர் மாற்றுத்திறனாளிகள் இந்த போட்டிகளில் கலந்துகொண்டனர். இவர்களுக்கு ஓட்டப்பந்தயம், குண்டுஎறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழை டி.எஸ்.எப் குழுமங்களின் நிர்வாக பங்குதாரர் சந்திரா மனோகரன் வழங்கினார்.இந்த போட்டிகளில் கலந்து கொண்ட அணைவருக்கும்  கலந்து கொண்டதற்கான பரிசுகள் வழங்கப்பட்டது.




இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ட்ரையல்ப்ளேஸர்ஸ் ரோட்டரி சங்கத்தை சார்ந்த டாக்டர் பிளோரா, செயலாளர் ப்ரதிமா, பொருளாளர் பிரேமா, திவ்யா, டாக்டர் ரஜினி, ஸ்னோபி தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் செய்தனர்.

கருத்துகள்