முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தூத்துக்குடியில் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த திறனாய்வு நிகழ்ச்சி

 




தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையும் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து  (19.03.2023) ஞாயிற்று கிழமை அன்று தூத்துக்குடியில்  கலை இலக்கிய நிகழ்ச்சி  நடத்தியது

.   ச.தே.செல்வராசு அவர்கள்  தலைமையில்...    கவிஞர், ஆ.மாரிமுத்து எழுதிய “உளி தீண்டா கல்லோவியம் "  கவிதைத் தொகுப்பும் - சப்திகா டொமிலா எழுதிய “கொடியா...  மரமா” சிறுகதைத் தொகுப்பும், கண்ணகுமார விஸ்வரூபன் எழுதிய “தேரியாயணம்” நாவலும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு. படைப்புகள் குறித்த திறனாய்வை முறையே  லில்லி மலர், சொ.பிரபாகரன், மி.சு.எழிலரசி ஆகியோர் முன்வைத்தனர். . படைப்பாளர்கள் மூவரும் தங்களது ஏற்பரையை நிகழ்த்தினார்கள்.



நிகழ்வில் ஆகம் கலைக்குழு, தொன்பாஸ்கோ இளையோர் இயக்கம் மற்றும் ஆழி கலைக்குழுக்களின் மூன்று குறு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. நாடகங்கள் குறித்த தங்களது பார்வையை எம்.எம்.தீன், லட்சுமி விசாகன்  உள்ளிட்டோர் சுருக்கமாக முன்வைத்தனர். "ஔவை காலத்தில் சமூகம்" என்ற தலைப்பில் தங்கத்துரையரசி  சிறப்புரையாற்றினார். நிகழ்வை தொடுவானம் அமைப்பின் தலைவர் நெல்லை தேவன் தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை சார்பாக லட்சுமி விசாகன் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட மூன்று நாடகங்களும் சமகால அரசியல் சூழலைப் பகடி செய்ததோடு அரசியல் குறித்து வெகுமக்களுக்கு கற்பிப்க்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் . தொடுவானம் கலை இலக்கியப் பேரவை நிகழ்ச்சியை  வெகு சிறப்பாக வடிவமைத்து நடத்தியது . தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், த.மு.எ.சங்கம் போன்ற அமைப்புகளிலிருந்தும் தோழர்கள் வந்திருந்து கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள். முத்துநகரில் இத்தகைய ஒரு சிறப்பான இலக்கிய நிகழ்ச்சி  அடுத்தடுத்து  நடத்திட வேண்டும் என்பது இலக்கிய ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது  










கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...