சர்வதேச அளவிலான பாரா தடகள விளையாட்டு போட்டி கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 4 முதல் 7 வரை நடைபெற்றது. இதில் 20-க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர் நேபால், கஜகசஸ்தான், மங்கோலியா, ஸ்ரீலங்கா ,லஞ்ச் ,ப்ளீஸ், கென்யா, போன்ற நாடுகளிலிலிருந்து கலந்து கொண்டனர்
இதில் இந்தியா சார்பாக 50க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் இப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 21 பேர் கலந்து கொண்ட ... இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாணவி முத்துமீனா f20 கேட்டகிரியில் குண்டு எறிதலில் மூன்றாம் இடம்(8.88) மீ. பிடித்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்
வெற்றி பெற்ற இவர் கடந்த மே. 8ம் தேதி திங்கள் கிழமையன்று தூத்துக்குடி திரும்பிய முத்துமீனாவுக்கு தூத்துக்குடி இரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது .. இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட பாரா சங்க செயலாளர் திரு ஸ்டீபன் அவர்கள் வரவேற்றார் தூத்துக்குடி மாவட்ட பாரா விளையாட்டு சங்க தலைவர் திரு முகமது நசீர் அவர்கள் பாராட்டிவாழத்துக்களை கூறினார்கள்.
மாணவி முத்துமீனா தற்போது சென்னையில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகிறார் அவருக்கு பயிற்சியாளர் அருண் மற்றும் சங்கர் ஆகியோர் சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருகிறார்கள் .இவரது வெற்றிக்கு உதவிய தமிழ்நாடு பாரா விளையாட்டு சங்க தலைவர் திரு சந்திரசேகர் அவர்கள் செயலாளர் கிருபாகரன் ராஜா பொருளாளர் விஜய் சாரதி ஆகியோருக்கு வெற்றி பெற்ற மாணவி முத்துமீனாவின் பெற்றேர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக