அறங்காவல் குழு தலைவர் க.செல்வ மாரியப்பன் , வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 


தூத்துக்குடி மேலூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் அறங்காவல் குழு தலைவராக.  க.செல்வ மாரியப்பன்   தேர்வு செய்யப்பட்டுள்ளார்


 தமிழ்நாடு வ உ சி பேரவை தலைவரும், ஓய்வு பெற்ற நகராட்சி-  மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவருமான திரு  க.செல்வ மாரியப்பன் அவர்கள்

  தூத்துக்குடி மேலூர் கிராம தேவதை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தான அறங்காவல் குழு தலைவராக  தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து    21-7-2023 வெள்ளி கிழமையன்று காலை 10 மணிக்கு  தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள    வ.உ.சிதம்பரனார் - சிலைக்கு மாலை அணிவிக்க வந்த  திரு  க.செல்வ மாரியப்பன் அவர்களுக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது    




     பின்னர்  பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ உ சி சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  இந்த நிகழ்ச்சியில் திரு. B. பொய் சொல்லான்  மற்றும் தூத்துக்குடி வணிக சங்க மாவட்ட தலைவர் P. விநாயகமூர்த்தி அவர்களும் திரு .  க செல்வ மாரியப்பன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி தங்களது  பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்



 அதனைத் தொடர்ந்து  மாநகராட்சி  மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான திரு இரா. மாடசாமி  மற்றும் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்க அமைப்பு செயலாளர் திரு ஆனந்தன் துணைத் தலைவர் சண்முகவேல் மத்திய அரசு ஓய்வூதியர்கள்  சங்கத்தை சார்ந்த ஆறுமுகநயினார் ஜெயசீலன், ரஸ்கின் ராஜ் , மோகன் , சண்முகவேல்  , ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது



கருத்துகள்