முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாள் விழா

 


தமிழக முன்னாள் முதல்வர்  பேறறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாளை   15 -09-2023  வெள்ளிக்கிழமை  அன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்ப்ட்டது


அந்த வகையில் தமிழ்நாடு   நகராட்சி மாநகராட்சி ஓய்வூதிய சங்கம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடவளாகத்திற்குள் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி நகராட்சிகளில் பணியாற்றும்  அலுவலர்களுக்கு ஒய்வு பெறும் காலத்தில்  ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார் நமது முன்னாள் முதல்வர் மாண்புமிகு பேரறிஞர் அண்ணா அவர்கள்

அன்னாரது 115 வது பிறந்தநாள் விழா வை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு  நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி பழையநகராட்சி கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு.... தமிழ்நாடு , நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக அதன் மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர தலைவருமான திரு மாடசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது

 இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒய்வூதியர் சங்க கூட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்தன் அவர்களும் , தமிழ்நாடு ஓய்வூதியர்  சங்க துணை தலைவர் சண்முகவேல், நகராட்சி மாநகராட்சி ஓய்வூதிய சங்க செயலாளர் ஜெயசீலன், துணைச் செயலாளர்  சண்முகவேல்,  இணை செயலாளர் ராஜ், செயற்குழு உறுப்பினர் தங்கசாமி, அந்தோணியம்மாள் , முனியம்மாள் மற்றும்  சேசுராஜ் , ரஸ்கின் ராஜ், ஆறுமுகம் பிள்ளை , மோகன்,   நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள்  மற்றும் ஓய்வு பெற்றவர்கள்  கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள் 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்