ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாள் விழா

 


தமிழக முன்னாள் முதல்வர்  பேறறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்த நாளை   15 -09-2023  வெள்ளிக்கிழமை  அன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்ப்ட்டது


அந்த வகையில் தமிழ்நாடு   நகராட்சி மாநகராட்சி ஓய்வூதிய சங்கம் சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடவளாகத்திற்குள் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி நகராட்சிகளில் பணியாற்றும்  அலுவலர்களுக்கு ஒய்வு பெறும் காலத்தில்  ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்தார் நமது முன்னாள் முதல்வர் மாண்புமிகு பேரறிஞர் அண்ணா அவர்கள்

அன்னாரது 115 வது பிறந்தநாள் விழா வை கொண்டாடும் விதமாக தமிழ்நாடு  நகராட்சி மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக தூத்துக்குடி பழையநகராட்சி கட்டிட வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு.... தமிழ்நாடு , நகராட்சி மற்றும் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பாக அதன் மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர தலைவருமான திரு மாடசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது

 இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒய்வூதியர் சங்க கூட்ட அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்தன் அவர்களும் , தமிழ்நாடு ஓய்வூதியர்  சங்க துணை தலைவர் சண்முகவேல், நகராட்சி மாநகராட்சி ஓய்வூதிய சங்க செயலாளர் ஜெயசீலன், துணைச் செயலாளர்  சண்முகவேல்,  இணை செயலாளர் ராஜ், செயற்குழு உறுப்பினர் தங்கசாமி, அந்தோணியம்மாள் , முனியம்மாள் மற்றும்  சேசுராஜ் , ரஸ்கின் ராஜ், ஆறுமுகம் பிள்ளை , மோகன்,   நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள்  மற்றும் ஓய்வு பெற்றவர்கள்  கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தார்கள் 




கருத்துகள்