முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொடுவானம் இலக்கிய இதழின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புலவர்.சு.முத்துசாமி அவர்கள் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா

 


தொடுவானம் இலக்கிய இதழின் ஐந்தாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் புலவர்.சு.முத்துசாமி அவர்கள் எழுதிய "கவிதைப் பூஞ்சோலை"கவிதை நூல் வெளியீட்டு விழா  (10.09.23) ஞாயிற்று கிழமை காலை 11 மணி அளவில் தூத்துக்குடி  அழகப்பா கல்வி மைய அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் முதலாவதாக    D.தனசேகர் வந்திருந்த அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்   தொடுவானம் இலக்கிய இதழின் ஆசிரியர் நெல்லை தேவன், தொடுவானம் கடந்து வந்த பாதை மற்றும் ஒவ்வொரு ஆண்டும் நடத்திய போட்டிகள் குறித்துப் பேசினார்.தொடர்ந்து இந்த ஆண்டு நடத்திய புதுக்கவிதைப்போட்டி குறித்தும் பேசினார்.

    கவிதை போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளை ஆசிரியர் தேவன் மற்றும் துணையாசிரியர் ஆ.மாரிமுத்து இருவரும் வாசித்தார்கள்.

     கவிஞர் மூக்குப்பேரி தேவதாசன்  தொடுவானம் இதழ் குறித்துப் பேசினார்

நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியாக ... வீதிநாடகக் கலைஞர்.ப.சக்திவேல் நூலாசிரியரைப்பற்றி அறிமுக உரையாற்றினார்.

தூத்துக்குடி சரவணா ஹோட்டல் உரிமையாளர் திரு.செந்தில் ஆறுமுகம் நூலை வெளியிட சுபா கிராபிக்ஸ் உரிமையாளர் திரு.பா.சுப்புராஜ் நூலைப்பெற்றுக்கொண்டார்

 கவிஞர்.ஆ.மாரிமுத்து,திரு.து.பத்மநாதன் இருவரும் நூலைத் திறனாய்வு செய்து பேசினார்கள்.

நூலாசிரியர் புலவர்.சு.முத்துசாமி ஏற்புரை வழங்கினார்.

தொ.க.இ.பேரவையின் சார்பில் நூலாசிரியருக்குச் சான்றிதழும் புத்தகம் அடங்கிய நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியின் நிறைவாக குறும்பட இயக்குனர் திரு.சோ.அருந்ததி அரசு நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்