தூத்துக்குடியில் : ஏசாதுரை அவர்கள் தொண்டர்களுடன் ... பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை



புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் அரசியல் வாரிசு கழக ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓபிஎஸ் அவர்கள் ஆணையின் படி    


பேரறிஞர்  அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாளான 15-9-2023 வெள்ளி கிழமை அன்று காலை 10 மணி அளவில்  தூத்துக்குடி மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களது சிலைக்கு  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஓ பி எஸ் அணியின் சார்பாக அதன்  தூத்துக்குடி மாநகர் ,  மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை அவர்கள் தலைமையில்  தொண்டர்கள் மற்றும் - மகளிர் அணியினர் திரண்டு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

         மேலும் அந்த வளாகத்தில் உள்ள  புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது 



இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஓ.பி.எஸ் அணியின் பிரமுகர்களும் , கட்சித் தொண்டர்களும் கலந்துகொண்டு அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க ,  என கோஷமிட்டனர்  .

கருத்துகள்