சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக சாயர்புரம் பஞ்சாயத்தில் உள்பட்ட பகுதியில் தேசிய மாணவர் படை சார்பாக ஸ்வச்சதா ஹி சேவா' தூய்மை பணி.
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப் பொறியியல் கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக ஸ்வச்சதா ஹி சேவா' தூய்மை பணி சாயர்புரம் பஞ்சாயத்து பகுதியில் கடந்த செப்டம்பர் 28 - 09-2023 ஞாயிற்று கிழமையன்று நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக சாயர்புரம் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி திரு. பாபு தொடங்கி வைத்து மாணவர்களுக்கு தூய்மை பணியை எடுத்துரைத்தார்.
கல்லூரி மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு தூய்மை பணி செய்தனர்.இந்த நிகழ்ச்சியை கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் உதவி பேராசிரியர் திரு. சா.டென்னிசன் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முன்னாள் டீன் திரு.ஐசக் பாலசிங் கல்லூரி இயந்திரவியல் துறை தலைவர் திரு.கனிசெல்வன் உடற்கல்வி ஆசிரியர் திரு.ஜாஸ்பர் திரு. ஆனந்த் மற்றும் பலர் கலந்து கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக