முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய யூ.டி.எஸ் செயலி: ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

 



தூத்துக்குடி ரயில் நிலையத்தில் வரிசையில் நிற்க தேவை இல்லை  வந்துவிட்டது  யூ.டி.எஸ் - செயலி 

முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு 


கவுண்டரில் வரிசையில் நிற்க தேவையில்லை

முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க புதிய செயலி ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

தூத்துக்குடி தூத்துக்குடி கவுண்டரின் கவுண்டர்களின் வரிசையில் நிற்காமல் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை  புதிய யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்கலாம் என தூத்துக்குடி ரயில் பயணிகளுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

முன்பதிவு இல்லாத டிக்கெட்
நாடு முழுவதும் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது அதற்கு ஏற்ப ரயில்கள் ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது மேலும் ரயில் பயணிகளுக்காக ஆன்லைன் சேவைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன 

அதன்படி ரயில் பயணிகள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட் களை எடுத்துக் கொள்ள முடிகிறது இது தவிர முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை ரயில் நிலையங்களில் இருக்கும் தான் இயங்கி எந்திரங்களில் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது எனினும் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பதற்கு அனைத்து ரயில் நிலையங்களிலும் கவுண்டர்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது இதனால் கடைசி நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வருவோர் டிக்கெட் எடுக்க சிரமப்படும் நிலை உள்ளது

யூ. டி .எஸ் செயலி
இதை தவிர்க்கும் வகையில் இந்திய ரயில்வே நவீன வசதிகளுடன் கூடிய யூ டி எஸ் என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது இந்த செயலியை அனைவரும் தங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அதில் முன்பதிவு இல்லாத டிக்கெட் நடைமேடை டிக்கெட் சீசன் டிக்கெட் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது இது குறித்து ரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி ரயில்வே நிர்வாகம் முத்தரவிட்டுள்ளது இதனை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது

அதன்படி தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சிறப்பு முகாம் நடந்தது அப்போது ரயில் பயணிகளில் செல்போனில் யூ டி .எஸ் செய்தியை பதிவிறக்கம் செய்து முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுப்பது குறித்து அதிகாரிகள் விளக்கினார்கள் இதனை பயணிகள் ஆர்வமுடன் கேட்டனர்

50 மீட்டருக்கு வெளியே

இதுகுறித்து தூத்துக்குடி முதன்மை வர்த்தக ஆய்வாளர் சி. நடராஜன் அவர்கள் கூறுகையில் யூ. டி. எஸ் செயலி மூலம் பயணிகள் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எளிதாக எடுக்கலாம் ஆனால் ரயில் நிலையம் ரயில் நிலைய ரயில் நிலையம் ரயிலுக்குள் இருக்கும்போது டிக்கெட் எடுக்க முடியாது இதன் மூலம் முறைகேடுகள் தடுக்கப்படுகிறது ரயில் நிலையத்திலிருந்து 50 மீட்டருக்கு வெளியே நின்று முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை எடுக்கலாம் ... இது தொடர்பாக விழிப்புணர்வு பதாதைகள் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றார்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்