முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேரி எழுத்தாளர் கண்ணகுமார் விஸ்வரூபன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

 


"அப்பாவின் இரண்டாவது மரணம்" நூல் வெளியீட்டு விழா...

கடந்த சனிக்கிழமை(28.10.23)மாலை 04.00 மணிக்கு  நாசரேத்தில் தேரி எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன் அவர்கள் எழுதி எமது காட்சில்லா கலைக்கூடம் பதிப்பகம் மூலம் பதிப்பிக்கப்பட்ட "அப்பாவின் இரண்டாவது மரணம்"என்ற சிறுகதை நூல் வெளியிடப்பட்டது.

விழாவிற்கு மேனாள் தமிழ்ப்பேராசிரியர் மா.காசிராசன் அவர்கள் தலைமை தாங்கினார்.

தொழிற்சங்கத் தலைவர் ஈ.கிருஷ்ணராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர் நா.இராமச்சந்திரன் அவர்கள் நூலை வெளியிட தொடுவானம் இதழின் ஆசிரியர் நெல்லை தேவன் அவர்கள் நூலைப் பெற்றுக்கொண்டார்

த.க.இ.பெ.ம. மாநிலச்செயலாளர் மருத்துவர் த.அறம் அவர்கள் நூலை அறிமுகம் செய்துவைக்க...தூத்துக்குடி மாவட்ட க.இ.பெ.ம தலைவர் அருட்சகோதரி மீ.சு.எழிலரசி,எழுத்தாளர் சொ.பிரபாகரன்,தூய சவேரியார் கல்லூரி து.பேராசிரியர்-ஜே.பி.ஜோஸ்பின் பாபா,ஏரல் லோபா பள்ளி தாளாளர்  முருகன் ஆகியோர் நூல் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

நூலாசிரியர் கண்ணகுமார விஸ்வரூபன் ஏற்புரை வழங்கினார்.இலக்கிய ஆர்வலர் ம.கண்ணன் நன்றியுரை ஆற்றினார்.   

 விழாவில்-கவிஞர் மூக்குப்பீறி தேவதாசன்,சி.அய்யாக்குட்டி,ந.சுடலையாண்டி,தொடுவானம் க.இ.பேரவை உறுப்பினர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்

விழா ஏற்பாடுகளை த.க.இ.பெ.மன்றம் நாசரேத்கிளை,நாசரேத் வள்ளுவர் வாசக வட்டம்,தேரி இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து செய்திருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்