நாசரேத்தில் 14 வது மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி



நாசரேத்தில்  மாவட்ட  அளவிலான கராத்தே மற்றும் சிலம்ப போட்டி நடைபெற்றது.

நாசரேத்தில் 14 வது   மாவட்ட  அளவிலான கராத்தே  மற்றும் சிலம்ப போட்டி ஆலன் திலக் கராத்தே பள்ளி சார்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு  ஊர்களிலிருந்து  இருந்து மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர் இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி,  திருச்செந்தூர், நாசரேத், பேய்குளம், சாத்தான்குளம்,    போன்ற ஊர்களில் உள்ள மாணவ மாணவிகள்  கலந்து கொண்டனர். இந்தப் போட்டி இரண்டு வகையாக நடைபெற்றது கட்டா மற்றும் குமட்டி என்ற பிரிவில் நடைபெற்றது. இந்த போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த  அப்போலோ குரூப் ஆப் கம்பெனி சட்ட ஆலோசகர் திரு .பூமி கிங்ஸ்லி ,  உலக சிலம்பம் தற்காப்பு கலை சங்க துணைத் தலைவர் திரு. விவின்  மற்றும் நாசரேத்    மர்காசியஸ்  பள்ளி இயற்பியல் ஆசிரியர்   ஜெர் சோம் ஜெபராஜ்  கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார். ஆலன் திலக் கராத்தே பள்ளி தலைமை பயிற்சியாளர் மாஸ்டர் கராத்தே டென்னிசன் போட்டி ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு கராத்தே மாஸ்டர்  ராமசாமி,  காளி ராஜ், சபரி ,குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்