தூத்துக்குடி அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக. ராவ் பகுதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 155 வது பிறந்த நாள் விழா

நேற்று 15-11-2024 வெள்ளிக்கிழமை 
தூத்துக்குடியின் தந்தையும் தூத்துக்குடி ஜாமியா பள்ளியின் முதல் கௌரவ தலைவருமான ஐயா ராவ் பகுதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களின் 155 வது பிறந்த நாளில் தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு ,விக்டோரியா ரோடு அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக பிறந்த தினம்  கொண்டாடப்பட்டது

பின்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக விஜயன் அவர்களும்,செயலாளராக இருதயராஜ் மஸ்கரனாஸ் அவர்களும்,பொருளாளராக அமலன் அவர்களும் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி கிளியோபட்ரா தியேட்டர் உரிமையாளர் பிரேசர் கொனரா அவர்களும், ஏ ஐ சி சி டி யு  தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் மின்னல் அம்ஜத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். 

இந்த நிகழ்வில் வியாபார சங்க நிர்வாகிகளும், பகுதி மக்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

.

கருத்துகள்