பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் கிறிஸ்து பிறப்பு விழா
டிசம்பர் மாதம் வந்ததும் நினைவில் வருவது கிறிஸ்து பிறப்பு விழா தான். அவ்வகையில் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைவராலும் பல்வேறு நிலைகளில் கிறிஸ்து பிறப்பு விழா டிசம்பர் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மறைமாவட்டத்தின் பல்சமய உரையாடல் பணிக்குழு சார்பில் இவ்வாண்டும் கிறிஸ்துமஸ் விழா கச்சனாவிளை குழந்தைகள் காப்பகத்தில் 06-12-2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இறைவேண்டலுடன் நிகழ்ச்சி துவங்க, பல்சமய உரையாடல் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மைக்லின் மேரி வரவேற்க, பணிக்குழுவின் செயலர் அருள்தந்தை பென்சிகர்லூசன் தலைமை தாங்கினார்.
காப்பகத்துக்கு குழந்தைகள் மகிழும்படியான நடனங்கள், பாடல்கள் நாடகங்கள் என கலை நிகழ்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கி, அனைவருக்கும் உணவு பரிமாற விழா இனிதே நிறைவுற்றது.
சுமார் 75 குழந்தைகள் உள்பட கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இல்லத்து அருட்சகோதரிகள் நன்றி கூறினர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பல்சமய உரையாடல் பணிக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக