01-03-2025 சனிக்கிழமை அன்று தென் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி தூத்துக்குடி சிதம்பரநகர் ஷாரா கலை பயிற்சி பள்ளி நடை பெற்றது -
இதில் 300 மீட்டர்,500 மீட்டர் மற்றும் 1000 மீட்டர் அளவில் 4 முதல் 16 வயது வரை மாணவ மாணவிகள் தூத்துக்குடி,திருநெல்வேலி,தென்காசி,சிவகங்கை,ராமநாதபுரம்,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட ஸ்கேட்டிங் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியினை H2O தொண்டு நிறுவன செயலாளர் காதர் முகைதீன் அவர்களும் ஏ ஐ சி சி டி யு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான மின்னல் அம்ஜத் அவர்களும் கொடி அசைத்து துவங்கி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியினை சிறப்பாக ஏற்பாடு செய்த ஷாரா கலை பயிற்சி பள்ளி முதல்வரும் ஸ்கேட்டிங் பயிற்சியாளருமான ஷாரா முபாரக் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
இதில் மாணவர்கள் பெற்றோர்கள் ஏனைய பொதுமக்கள் பெருமளவு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக