முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டி

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி Mother Fiverose Trust ன் சார்பாக உலக பிரெய்லி தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான கட்டுரை, கலை போட்டிக்கான பரிசளிப்பு விழா,



 நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரெய்லி கண்காட்சி மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளி உரிமைத்துறை அமைச்சர் திருமதி கீதாஜீவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் K.B பிரம்ம நாயகம், முதன்மைக்கல்வி அலுவலர் திருமதி ரா. சங்கீதா சின்னராணி, மாநில மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினர் திரு. மெயகண்டன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டில் பல மாவட்டகளில் இருந்து பார்வைற்றோர், மாணவ மாணவிகள் Teachers கலந்து கொண்டனர். இதில் IBN AL HAYTHAM BRAILLE வாழ்நாள் சாதனை விருது முனைவர் வே. சுகுமாரன் அவர்களுக்கும் சிறந்த முறையில் மக்களுக்கு சேவை ஆற்றி வரும் சமூக ஆர்வலர் DR. S.முகமது இலியாஸ் B. A., அவர்களுக்கு Best Social Service Award  வழங்கப்பட்டது. 

தொடர்ந்து டிரஸ்டி Dr. முகம்மது நஸிர் பிஸியோதெரபிஸ்ட் அவர்கள் பிரெய்லி கண்காட்சி மற்றும் உலக பிரெய்லி தினத்ததை பற்றி சிறப்புரையாற்றினார். டிரஸ்டி ஆர்க்கிடெக்ட் முகம்மது ஹயாஸ் அவர்கள் பார்வைற்றவர்களின் தேவைகளை பற்றியும், அவர்களின் வாழ்வியலை பற்றியும் எடுத்துரைத்தார்.

 தூத்துக்குடியில் பார்வைற்றவர்களுக்கு பள்ளிக்கூடம் இல்லை, வரும் கல்வியாண்டில் தூத்துக்குடியில் பார்வைற்றவர்களுக்கு பள்ளிக்கூடம் கொண்டு வர வேண்டும். என்ற கோரிக்கை டிரஸ்டின் சார்பாக அரசிற்கு வைக்கப்பட்டது, 

கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், இலவச வீடு, இவர்களுக்கு கிடைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மதுரை St. Josph பார்வையற்றோர் பள்ளிக்கு Best School விருது கிடைத்தது.

 முதல் பரிசு கோயமுத்தூர் Ramakrishna Mission மாணவி பரணி ஸ்ரீயும் 2ம் பரிசு மதுரை St Joseph School மாணவன் சிவக்குமாரும், மூன்றாம் பரிசு திருச்சி அரசு பார்வையற்றவர் பள்ளி மாணவி வனிதா அவர்களும் நான்காம் பரிசு சேலம் அரசு பார்வையற்றவர் பள்ளி மாணவர் அபினேஷ் குமாரும் வாங்கினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

பணி நிறைவு பெறும் அரசு ஊழியருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தூத்துக்குடி  கைலாஷ் மஹாலில் 20 .12.2025 சனி கிழமை மாலையில்  நடைபெற்றது   தூத்துக்குடி மாவட்ட தலைவர் s.சந்தன ராஜ் அவர்களின் பணி நிறைவு பெறும் நிலையில்  அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மாநகர கிளைச் சங்க தலைவருமான இரா.மாடசாமி அவர்கள்  கலந்து கொண்டு S.சந்தன ராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி  தனது பாராட்டை தெரிவித்து  வாழ்த்தி  பேசினார்.  இந்த நிகழ்ச்சியில்  சங்க பொருளாளர் M.ராஜ், துணைச் செயலாளர் P.ஜெயசீலனா ஆகியோர் உடன் இருந்தனர்         

ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க தூத்துக்குடிகிளை பொதுக்குழு கூட்டம் 14/02/2026 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி ஆனந்த மஹாலில் வைத்து நடைபெற்றது தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு...பொங்கல் போன் ரூபாய் 500 ஆக இருந்ததை ரூபாய் ஆயிரமாக உயர்த்தி வழங்கிய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டத்தின் வழியாக நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும்.... தமிழகத்தில்  1 - 31 கோடி முப்பத்து ஒன்று லட்சம் மகளீர்க்கு மூன்று மாதம் கலைஞர் மகளிர் உரிமைக் தொகை முன்பணமாக ரூபாய் 3,000. கோடை காலஊக்கதொகையாக ரூபாய் 2000-முமாக  மொத்தம் ரூபாய் 5,000- வழங்கியதற்கும் நகராட்சி மற்றும் மாநகராட்சிஊழியர்களுக்கு  பொங்கல் திருநாள்  முன்பணம் வழங்கிய உள்ளாட்சி நிதி தனிக்கை துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோருக்கும் .சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கப்பட்டது 70 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற தமிழக அரசு பணியார்களுக்கு ஓய்வூதியத்தில் கூடுதலாக 10% சதவீதம்  உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வரை...