முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கதைசொல்லல் கலையின் அறிமுகம்

 தூத்துக்குடியில் கலையின் குரல்   அமைப்பின் சார்பில் '(25-01-2026) அன்று காலை "கலை_அறிவோம்" நிகழ்வில் - கதைசொல்லல் கலையின் அறிமுகம்..., மில்லர்புரம் புரூஸ் லீ தற்காப்புக் கலை பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.



நிகழ்வின் தொடக்கமாக பறைப் பயிற்சி மாணவி ம.மகாலெட்சுமி அவர்கள் பாடலுடன் வரவேற்புரை வழங்கி அனைவரையும் வரவேற்றார். 



தொடர்ந்து கதை சொல்லல் கலையின் அறிமுகம்,  வரலாறு மற்றும் கதை சொல்லல் சிறார்களுக்கு எவ்வளவு அவசியம் என்றும் கதைகளை சொல்லும் போது கடைபிடிக்க வேண்டிய நுட்பங்கள், கதை பின்னல் போன்ற பயிற்சிகளை  தோழர் சு.லெட்சுமி விசாகன் அவர்கள் சிறப்பாக வழங்கினார்.



தொடர்ந்து நெடுஞ்சாலை கவிஞர் தா.செல்வராஜ் பயிற்சியாளர் சு.லெட்சுமி விசாகன் அவர்களை வாழ்த்தி கவிதை வாசித்து சிறப்பித்தார்.


தொடர்ந்து எழுத்தாளர் ஸ்ரீதர கணேசன் அவர்கள் பயிற்சியாளர் சு.லெட்சுமி விசாகன் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தார், ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி திரு. செய்யது முஹம்மது செரிப்  அவர்கள் பயிற்சியாளருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார். 

தொடர்ந்து இலக்கிய ஆர்வலர் திரு.து.பத்மநாதன் அவர்கள் கலையின் குரல் அமைப்பின்  கலைச் செயல்பாடுகள் குறித்தும் வளர்ச்சி குறித்தும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். 

 

நிறைவாக கலையின் குரல் அமைப்பின் நிறுவனர் கலைவளர்மணி ப.சக்திவேல் அவர்கள் நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்தார்.


நிகழ்வில் திரு.செல்வின், திரு.இளமுருகு, திரு பட இயக்குனர் சோ.அருந்ததி அரசு, குமிழ்முனை சைமன், எழுத்தாளர் நெல்லை தேவன், எழுத்தாளர் ஏ.சாந்தி பிரபு,  செய்தியாளர் சிவா, காதைக்களம் ஒருங்கிணைப்பாளர் அன்புகுமார், பகுஜன் லூயிஸ், ஆசிரியர் பிரபாவதி, மரிய சேவியர் மெத்தோடியஸ் ஆகியோரோடு மாணவ மாணவிகள் பலரும் இந்த பயிற்சியில்  கலந்து கொண்டு பயன்பெற்று சிறப்பித்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

" நமது எழுத்தாணி " நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி

                                                                                                                                                                               நமது எழுத்தாணி நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கவிதை போட்டி 2023 பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் பொதுநல ஆர்வலர்கள் ஆகிய 3 பிரிவுகளில் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு கவிதை கவிதை போட்டி                                                       ...

இளைஞனே! நீ சிகரட் - மதுவை விட்டுவிடு , இல்லையென்றால் ...

   வியாபாரம் என்பது பணம் ஈட்டுவது அல்லது லாபம் பார்ப்பதும் என்பதை தாண்டி மக்களுக்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் ஓர் இடத்தில் இருந்து கொள்முதல் செய்து தங்களது வியாபார ஸ்தலங்களின் மூலம் மக்களின்  தேவைக்கு கொண்டு சேர்ப்பதே வியாபாரத்தின் நோக்கம்மாக இருந்து வருகிறது இந்த வியாபாரத்தில் சமூக  அக்கறையும் மக்களின் நலம் காக்க முயல்வதும் தான் வியாபாரத்தின் மேன்மையான தர்மமாக கருதப்படுகிறது இந்த வகையில் ஒரு சிறு வியாபாரத்தில் இரண்டு தலைமுறையாக சமூக அக்கறையோடு இளைஞர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள் கற்கின்ற கல்வி மீதும் அவர்களது உடல் நலத்தின் மீதும் அக்கறை கொண்டபல வியாபார ஸ்தலங்களில்... ஒன்றுதான்  தூத்துக்குடியில் உள்ள J.J. பென் சென்டர் இது கடந்த  63   ஆண்டுகளாக  இயங்கி வருகின்றது.   இந்த கடையின்  பெயர் பலகையின்,  பெயரின் அளவை காட்டி லும், இளஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓரு வாசகம்  அனைவரின் பார்வையில் விழும் வகையில் பொி  யதாக அமைத்து   பார்ப்போரை சிந்திக்க வைக்கிறது,  அப்படி சிந்திக்க வைக்க கூடிய வாசகம் ...

மனித உரிமைகள் கழகம் பாண்டிச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்குமா ? வழக்கறிஞர் டாக்டர் எஸ் சுந்தர் அவர்கள் விளக்கம்