தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை சங்க புதிய தலைவர் பதவி ஏற்பு விழா
தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை சங்கத்தின் புதிய தலைவர் பொறுப்பேற்பு விழா 31 -01-2026 (சனிகிழமை) SDR ரெஸ்டாரண்டில் வைத்து நடைபெற்றது
இதில் தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை கழகத்தின் செயலாளர் சுப்புராஜ், துணைத் தலைவர் முருகையாபாண்டியன். டெக்னிக்கல் சேர்மன் ராஜசிங்கம் - மற்றும் புதிய தலைவர் SDR அபிஷேக் ப
பொன்சீலன் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் , காவல் உதவி ஆணையர் (திருநெல்வேலி மாவட்டம்)- S.D.பொன்சீலன் -SDR விஜயசீலன்.SDR சாமுவேல்ராஜ் மற்றும் கழக நிர்வாகிகள். மாணவர்கள் - மற்றும் பெற்றோர்கள். கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
முக்கிய நிகழ்வாக புதிய தலைவராக பொறுப்பேற்று கையொப்பம் இடும் நிகழ்வு மற்றும் இந்த வருடம் குத்துச்சண்டை போட்டிகளில் சாதித்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் புதிய தலைவர் அபிஷேக் பொன்சீலன் அவர்கள் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்
இறுதியாக தூத்துக்குடி மாவட்ட குற்றச்சண்டை கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் நடுவர்கள் அனைவரும் இணைந்த குழு புகைப்படம் எடுத்து விழாவினை நிறைவு செய்தனர்
மேலும் இந்த நிகழ்வில் புதிதாக பொறுப்பேற்ற தலைவர் அபிஷேக் பொன்சிலன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை சங்கத்திற்கு புதிதாக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் குத்துச்சண்டை மேடை அமைப்பது பற்றி தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
நிகழ்ச்சி நிறைவாக தூத்துக்குடி மாவட்ட குத்து சண்டை கழகத்தின் செயலாளர் சுப்புராஜ் நன்றியுரை ஆற்றினார்
நிகழ்ச்சி ஏற்பாட்டினை தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழக செயலாளர் சுப்புராஜ் தலைவர் எஸ் டி ஆர் அபிஷேக் பொன்சிலன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்
கருத்துகள்
கருத்துரையிடுக