73 கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளுக்கு தாய் சேய் நலப் பொருட்கள் : - தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் வழங்கி பெருமிதம்

 



சூப்பர் ஸ்டார் .திரு. ரஜினிகாந்த் - திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களின் சீதனத்துடன் கடந்த டிசம்பர் 18ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்குபெற்ற 73 கர்ப்பிணி பெண்களின் குழந்தைகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் 14 வகை தாய் சேய் நலப் பொருட்கள் வழங்கப்பட்டது .

 இதில் தூத்துக்குடி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்ற இணைச்செயலாளர் ஆர் தவமணி அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் R.ஜெயம், ஆண்டவர் S.முருகன், ராமசாமி, புரட்சிவேந்தன் முருகன்,  மேகலா பழனி முருகன்,  P.ராமர். ரஜினிசெல்வம்.  லிங்கா குமார் , சிவசூரியன், மூர்த்தி, வள்ளிநாயகம், அசோக். எட்மண்ட் ,தனபால் ,ராஜ்  ரமேஷ். சந்தானம் ஆகியோர்  பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினர்.



 இதில் சிறப்பு விருந்தினர்களாக PFC பாரதசேவாவின் தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  Dr. வி. பழனி மகாராஜன், திருச்சி மாவட்ட துணை செயலாளர் ராயல் ராஜ், மதுரை மாநகர நிர்வாகி பழனி பாஷா, தாம்பரம் நகர செயலாளர் கேசவன் ,எழும்பூர் குமார், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் விவசாய அணி செயலாளர் , சிவசுப்பு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் வர்த்தக அணி செயலாளர்  ஜெயக்கொடி, கோவில்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரசேகர், கோவில்பட்டி நகர செயலாளர் மகேஷ் பாலா, மற்றும் ஐக்கிய அரபு அமீரக பொறுப்பாளர் கோ பொன்முருகன், ஐக்கிய அரபு அமீரக துணைச் செயலாளர் லெனின்,  கும்பகோணம் நகரத் துணைச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கருத்துகள்

  1. தலைவர் ரசிகர்கள் எப்பவும் தலைவர் போலவே 🤘🏻🤘🏻🤘🏻🤘🏻

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக