இடுகைகள்
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில்"உலக குருதி கொடையாளர் தினம்"
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
உலக குருதி கொடையாளர் தினம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக மருத்துவமனையில் 14.06.2018 அனுசரிக்கப்பட்டது இந்த குருதி கொடையாளர் தினத்தில்காலை 10மணி முதல் மாலை 4;00மணி வரை நடைபெற்ற இரத்த தான நிகழ்ச்சியில் வ.உ.சி துறைமுக துனைத்தலைவர்திருS.நடராஜன்,மற்றும் அவரது குடும்பத்தினர்,கடலோர காவல் படையின்D.I.Gதிரு.வெங்கடேஷ்,மற்றும்C.I.S.F, தீயணைப்புத்துறை, மின்சார ஊழியர்கள் அலுவலர்கள். அலுவலக உதவியாளர்கள், என மொத்தம் நூற்று பதினொறு பேர்கள்லந்துகொண்டு இரத்ததானம் வழங்கினார்கள். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இரத்த வங்கி டாக்டர் சாந்தி தலைமையில்10க்கு மேற்பட்ட அரசு மருத்துவ மனை ஊழியர்கள் வ.உ.சி துறைமுக மருத்துவமனை டாக்டர்கள் இனைந்து குருதி கொடையாளர் தின நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடித்தனர்.
தூத்துக்குடி சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழா
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தூத்துக்குடி மாசிலாமணி புரம் மூன்றாம் தெரு, {பழைய ஆர்-டி-ஓ அலுவலகம்அருகில்) அருள் பாளிக்கும் சந்தனமாரியம்மன் திருக்கோவில் கொடை உற்சவம் 12-06-2018 செவ்வாய் கிழமையன்று வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொடை விழாவில் பூஜை மற்றும் அலங்காரம், சிறப்பு சென்டைமேளம், இடம்பெற்றது, முளைப்பாரி மற்றும் இரவு 7 மணிக்கு 151 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள்,குழந்தைகள்,பக்தர்கள் கலந்துகொண்டனர். கொடைவிழவிற்கான அனைத்து ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா மற்றும் . s.s. லெட்சுமி எர்த்மூவர் திரு . A.E. சுப்பையாபாண்டியன் அவர்கள் மற்றும் விழா குழுவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு வாரவிழா மாவட்ட காவல்துறை துனை கண்காணிப்பாளர் பங்கேற்பு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்