இடுகைகள்

புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு*

படம்
      தமிழகத்தில் வரும் 20 ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்; ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்:  மே 5-ம் தேதி தொடங்க இருந்த பிளஸ் டூ தேர்வு ஒத்திவைப்பு .   புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு* தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20 முதல் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளஅதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.* மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.             ஞாயிற்றுகிழமைகளில் அத்தியவாசிய பணிகளைத்தவிர முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.* இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:*  ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், கீழ்க்காணும்செயல்பாடுகளுக்கும் 20.4.2021 அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது* இரவு நேர ஊரடங்கு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக...

அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

படம்
 

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

படம்
  தூத்துக்குடி மாவட்;டம் கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஊடக அறிவிக்கை (ஆநனயை டீரடடநவin) தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா-19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் இருவேளை கபசுர குடிநீர்  விநியோகமும், கிருமிநாசினி தெளிப்பும், தூய்மைபணிகளும்; மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. வல்லுநர் குழுக்களின்  பரிந்துரைகளின்படி இரத்தக் கொதிப்பு, இதயநோய், சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் போன்ற தொற்றாநோய் பாதிப்புள்ள மக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள், முதியோர் போன்ற நோய் தொற்றினால் எளிதில் பாதிக்கக்கூடிய மக்களை கொரோனா தொற்று வராமல் தடுக்க களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர் கண்காணிப்பு, பொதுமக்கள் முகக்கவசம் அணிதல்; வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றாத மக்களுக்கு அபராதம் விதிப்பு, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள் மூலமா...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு.

படம்
          தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமயில் நடைபெற்றது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் 2வது கட்டமாக தீவிரமாக அதிகரித்து வருகிறது. இது குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மாநில அரசுகள் விதித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிப்பதற்கும், அவற்றை அமல்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூபாய் 200ஃ- அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.  அதன்படி இன்று (09.04.2021) தூத்துக்குடி காவல்துறை சார்பாக குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், பரவாமல் தடுப்பதற்கான அரசு விதித்துள்ள நெறிமுறைகள்...

கோவிட் 19 தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள்

படம்
      கொரோனா நோய் தொற்றினை முற்றிலும் தடுத்திடும் விதமாக, தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில், குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் 01.04.2021 முதல் 30.04.2021 வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காததாலும், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்து வருவதாலும், நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய்த் தொற்றை கட்டுப்படுத்த, 10.04.2021 ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தும், சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தும் அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.     அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு 08.04.2021 நாளிட்ட அரசாணையில் தெரிவித்துள்ளபடி, 10.04.2021 முதல் கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு மறு உத்திரவு வரும் வரை தட...

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வரிசையில் நின்று வாக்களித்தார்

படம்
தூத்துக்குடி மாவட்ட  தேர்தல் அதிகாரி யும் / ஆட்சி தலைவரும்மாகிய மரு .கி.  செந்தில்ராஜ்  இ .ஆ .ப . அவர்கள்  தூத்துக்குடி கால்டுவெல் பள்ளியில் உள்ள  வாக்கு சாவடிக்கு வந்து வரிசையில் நின்று  தனது ஜனநாயக கடமையான வாக்களிக்கும் பணியை நிறைவேற்றினார்

100% சதவீத வாக்களிக்க விழிப்புனர்வு நிகழ்ச்சி பொதுமக்கள் பஙகேற்பு

படம்
 100% சதவீத வாக்களிக்க விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடி K. சின்னதுரை வளாகத்தில் பொதுமக்களிடத்தில்  கையெழுத்து  பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது  இதில் எந்த விதி மீறல் இல்லாமலும்  வாக்குக்கு பணம் பெறாமல் வாக்களிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது  .     இந்த நிகழ்ச்சியில் K. திருநாவுகரசு கடை உரிமையாளர் தலைமை தாங்கினார்.  மேலும் கடை மேலாளர் திரு.மர் சுக்  ரகுமான் அவர்களும் அைட நிர்வாகிகள்  _ பனியாள்ளார் கள் - வாடிக்கையாளர்கள்   கலந்து கொண்டனர்.         பின்னர் சமூக நலத்துறை ( OSC) நிர்வாக அதிகாரி திருமதி செலின் பொது விளக்க உரை அளித்தார்கள் இதில் தூத்துக்குடி  மாவட்ட கட்டுமான நல சங்க தலைவர் மின்னல் அம்ஜத்   ஆகியோர்  கலந்து கொண்டனர்