இடுகைகள்

HMS : தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு. சார்பாக மாவட்ட அளவிளான ஆலோசனை கூட்டம்

படம்
    HMS : தமிழ்நாடு அனைத்து தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 7-2- 2022 சனிக்கிழமை அன்று  தூத்துக்குடி மாவட்ட HMS  அலுவலகத்தில்  வைத்து ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது சங்கம் அமைத்தல், மற்றும் மாநில அரசு கொடுக்கும் பணப் பயன்களை எப்படி தொழிலாளர்களுக்கு பெற்றுத்தருவது , போன்ற  விபரங்கள்  வழங்கப்பட் டது   இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் மின்னல் அஞ்சத் தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளர்களாக K.V திருப்பதி H.M.S ன் மாநில செயலாளர் மற்றும் TALUF மாநில பொதுச் செயலாளர் மற்றும் மண்டலத் தலைவர் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்  இந்த கூட்டத்திற்கு சமூகப்  போராளி பேராசிரியர் பாத்திமா பாபு மற்றும் சாரா கலை பயிற்சி பள்ளி தாளாளர் ஷாநவாஸ் , தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை செயலாளர் ஞானதுரை மற்றும் நமது எழுத்தாணி ஆசிரியர் சிவகாமி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  HMS ஆலோசனை கூட்டத்திற்கு கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்  இந்த சங்கத்தில் இணைவதினால்  ஏற்படுகின்ற பலன்கள் குறித்தும்...

Zomato ஊழியர் சார்பாக தூத்துக்குடியில் தண்ணீர் பந்தல் திறப்பு

படம்
  தூத்துக்குடி மாவட்ட Zomato ஊழியர் சார்பாக தூத்துக்குடியில் 4-4-2022 திங்கள் கிழமையன்று  கோடை வெயில் தாக்கத்திலிருந்து பொதுமக்கள்   தங்கள்   தாகம் தனிக்கும்  வகையில்   குரூஸ் பர்னாந்து சிலை அருகில் தண்ணீர்  மற்றும் மோர் பந்தல்  அமைக்கப்பட்டது  இந்த தண்ணிர் மற்றும் மோர் பந்தலை தூத்துக்குடி மத்திய காவல் நிலைய  ஆய்வாளர் திரு ஜெயபிரகாஷ்  அவர்கள்  கலந்து கொண்டு திறந்து வைத்து சிறப்பித்தார் ,பின்னர் பொது மக்களுக்கு மோர் வழங்கப்படது இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் போக்கு வரத்து பாதுகாப்பு காவலர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.  இந்த ஏற்பாட்டினை தூத்துக்குடி மாவட்ட Zomato நகர பொறுப்பாளர்  மகேஸ்வரன் அவர்களும் மற்றும்  அனைத்து Zomato ஊழியர்களும்  செய்தனர்   இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் துணை செயலாளர் ஸ்டீபன் அவர்களும் கலந்து கொண்டனர்.

வூசு வீர சாகச போட்டியில் சாகசம் புரிந்த பள்ளி சிறுமி

படம்
 

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பயிற்சி : மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

படம்
  சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். -------------------------- தூத்துக்குடியில் போக்குவரத்து துறை சார்பில் நடைபெற்ற முகாம் மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கான சிறப்பு பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் லோக.பாலாஜி சரவணன் அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பினை வலியுறுத்தி ஒவ்வொரு மாதமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து தலைக்கவசங்கள் வழங்கினோம்.  கடந்த மாதம் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த மாதம் கார், பேருந்து என அனைத்து ஓட்டுநர்களுக்கும் சாலை பாதுகா...

தூத்துக்குடி மாவட்ட ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மாவட்ட செயற்குழு கூட்டம்

படம்
  ஜனநாயக மக்கள் உரிமை கழகம் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் 20-03-2022 ஞாயிறு   கிழமை அன்று காலை 11-மணிக்கு  நடைபெற்றது   ஜனநாயக மக்கள் உரிமை கழக நிர்வன தலைவரும் ஹீயுமன் ரைட்ஸ் டுடே பத்திரிக்கை ஆசிரியருமான டாக்டர் S.சுந்தர்  அவர்களின் வழிகாட்டுதலின் படி தூத்துக்குடி மாவட்ட   ஜனநாயக மக்கள் உரிமை கழக  தலைவர் வழக்கறிஞர்                 திரு .T.J கார்த்திகேயன்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது,  இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்  தொழில் அதிபர்திரு. N. சாமிநாதன் அவர்கள் மாவட்ட நிர்வாகிகளை வரவேற்று பேசினார் மாவட்ட பொருளாளர்வழக்கறிஞர்  திரு. ரமேஷ்  அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு  சிறப்பித்தார்கள் கூட்டத்தின் தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 1. தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி கீழ் செய்யபடும் பணிகள்  ஆமை வேகத்தில் செயல்படுத்தப டுகிறது. இதனால் மக்கள் பெரு...

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு

படம்
 2021-2022 ஆம் நிதியாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான       (UYEGP)    (PMEGM)  வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், (Pஆநுபுஆ) பராத பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் சிறு குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டம், ஆவின் திட்டங்களுக்கு சிறப்பு முகாம் வருகின்ற 25.03.2022 அன்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் ககலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார் ------------- தூத்துக்குடி மாவட்டம் பண்டாரம்பட்டியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2வது சுற்று கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (18.03.2022) துவக்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையினை கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் மூலமாக 4 மாதங்களுக்கு மேல் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மாவட்டம் முழுவதும் 1,10,200 கால்நடைகள் கணக்கெடுக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து 40 நாட்களுக்குள் 1,10,200 கால்நடை...