இடுகைகள்

மூளை முடக்கு குறைபாடு    தேசிய அளவிலான தடகளப் போட்டி : சர்வதேச போட்டிக்கு தூத்துக்குடி மாணவர்கள் தகுதி

படம்
 

மூளை முடக்கு குறைபாடு தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை :

படம்
  மூளை முடக்கு குறைபாடு    தேசிய அளவிலான தடகளப் போட்டி நியூ டெல்லி ஜவர்கலால் நேரு ஸ்டேடியத்தில் கடந்த   4.5.2022 முதல் 07.5.2022. வரை நடைபெற்றது   இதில் தமிழ்நாடு சார்பாக 10 பேருகள் கலந்து கொண்டனர் இதில் தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் கற்குவேல் குண்டு எறிதலில் முதலிடமும் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடமும் பாண்டியராஜன் 1500 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பிடித்து தமிழ்நாட்டுக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்  வெற்றி பெற்ற மாணவர்களை  தூத்துக்குடி மாவட்ட  மூளை  முடக்குவாதம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது  இந்த நிகழ்வில்  தூத்துக்குடி மாவட்ட மூளை முடக்குவாதம் சங்க செயலாளர்  மாஸ்டர் திரு ஸ்டீபன் அவர்கள் மற்றும்  தலைவி திருமதி ஜெயலட்சுமி  அவர்கள், துணை தலைவி ஷாலி,  அவர்கள் மற்றும் பொருளாளர் திரு பத்மநாதன் அவர்கள் ,துணைச் செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.   வெற்றி ப...

தூத்துக்குடி மாவட்டத்தில் 144-ன் கீழ் தடை உத்தரவு

படம்
  தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 13.05.2022 மற்றும் 14.05.2022 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா வினை முன்னிட்டு 12.05.2022 மாலை 6.00 மணி முதல் 15.05.2022 காலை 6.00 மணி வரை மாவட்டம் முழுமைக்கும் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் -------------------------       தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 13.05.2022 மற்றும் 14.05.2022 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா வினை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 12.05.2022 மாலை 6.00 மணி முதல் 15.05.2022 காலை 6.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும்; வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகர...

உலக தலசீமியா தினம். தலசீமியா நோய் குறித்து விழிப்புணர்வு. .

படம்
  தூத்துக்குடி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  உலக தலசீமியா தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், re இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. ------------------------- தூத்துக்குடி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தலசீமியா தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  08.05.2022 அன்று கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, தலசீமியா நோயாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களிடம் தலசீமியா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தலசீமியா நோய் எப்படி ஏற்படுகிறது, அதனை தடுப்பது எப்படி என்பது குறித்து மக்களிடையே விழிப்பணாவு ஏற்படுத்த ஆண்டுதோறும் மே மாதம் 8 ஆம் தேதியை உலக தலசீமியா தினம் கொண்டாடப்படுகிறது. தலசீமியா இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதிய...

‘கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்”

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசின் சாதனை குறித்த ‘கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்” என்ற புத்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள். ---------------------------- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரவிய ரத்தின நகர் பகுதியில், தமிழக அரசின் ஒராண்டு நிறைவை முன்னிட்டு, நகர்புற அடர்காடு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், ஒராண்டு சாதனை மலரை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், வெளியிட, மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன்பெரியசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.தி.சாருஸ்ரீ,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு  பொறுப்பேற்று ஓராண்டிற்குள் தூத்துக்குடி  மாவட்டத்தில் முதல்வரின் முகவரி த...

நவின முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்கள்

படம்
  திருநெல்வேலி மாவட்ட பனைபொருட்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். --------------------------- திருநெல்வேலி மாவட்ட பனைபொருட்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நவீன முறையில் பனை வெல்லம் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மற்றும் இலவச உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள்  (04.05.2022) அன்று வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு பனை பொருள் வளர்ச்சி வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் கூட்டுறவு சம்மேளனம் தூத்துக்குடி திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய கூட்டுறவு நிறுவனமாகும். இதில் 95 ஆரம்ப பனை வெல்ல கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 46 பனைவெல்ல கூட்டுறவுசங்கங்கள் உள்ளது. அதில் ...

ஆழ்வார்திருநகரி மற்றும் புன்னக்காயல் ஊராட்சியில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்

படம்
           ஆழ்வார்திருநகரி  மற்றும் புன்னக்காயல்  ஊராட்சியில்   மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்                              . -------------------------  தூத்துக்குடி மாவட்டம்,  ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்                              புன்னக்காயல் ஊராட்சி  திருமண மண்டபத்தில்  (28.04.2022)   அன்று நடைபெற்ற மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்களின் மனுக்கள் பெறும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள், பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 24.04.2022 அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட ஆணையிட்டிருந்தார்கள். அதனடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்    புன்னக்காயல் ஊர...