இடுகைகள்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பாக. வீரவணக்கம்

படம்
  அனைத்திந்திய இளைஞர்    பெருமன்றம் சார்பாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும்நிகழ்ச்சி  அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற    :4ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்      ஸ்டெர்லைட்   எதிர்ப்பு  போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு      வீரவணக்கம் செலுத்தும்   நிகழ்ச்சி  22-5-2022 அன்றுகாலை 11 மணிக்கு இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் P சந்தன சேகர் தலைமையில் நடைபெற்றது  நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி மாநகர உதவி செயலாளர்  ஜீவானந்தம் , இந்திய வழக்கறிஞர்  சங்க மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர்                      SP ராமச்சந்திரன்,  தோழர்கள் பெருமாள், செண்பக.  ராஜா, ராஜாசிங், பலவேசம்,  காளீஸ்வரன், முனியசாமி, சேகர்,  தாமரைச்செல்வம்,கோபால், உட்பட    பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள் அனைத்திந்திய   இளைஞர்   பெருமன்றம்  ச...

கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி

படம்
: 16.05.2022 தூத்துக்குடி மாவட்டம் கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி வகுப்பினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர்  தொடங்கி வைத்தார் ------------------------- தூத்துக்குடி மாவட்டம் கடல்சார் உணவுப்பொருள் வணிக மையம் மீன் பதன தொழில்நுட்பத்துறை மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கயல் கலையரங்கில்  நடைபெற்றது கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி வகுப்பினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்துபேசியதாவது: கடல்சார் உணவுப்பொருள் வணிக மையம் மீன்பதன தொழில்நுட்பத்துறை சார்பில் கடல் உணவு மேம்படுத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் கடல்சார் தொழில்முனைவோருக்கான பயிற்சி துவக்க விழா நிகழ்ச்சி...

மூளை முடக்கு குறைபாடு    தேசிய அளவிலான தடகளப் போட்டி : சர்வதேச போட்டிக்கு தூத்துக்குடி மாணவர்கள் தகுதி

படம்
 

மூளை முடக்கு குறைபாடு தேசிய அளவிலான தடகளப் போட்டியில் தூத்துக்குடி மாணவர்கள் சாதனை :

படம்
  மூளை முடக்கு குறைபாடு    தேசிய அளவிலான தடகளப் போட்டி நியூ டெல்லி ஜவர்கலால் நேரு ஸ்டேடியத்தில் கடந்த   4.5.2022 முதல் 07.5.2022. வரை நடைபெற்றது   இதில் தமிழ்நாடு சார்பாக 10 பேருகள் கலந்து கொண்டனர் இதில் தூத்துக்குடி மாவட்ட மாணவர்கள் கற்குவேல் குண்டு எறிதலில் முதலிடமும் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடமும் பாண்டியராஜன் 1500 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பிடித்து தமிழ்நாட்டுக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்  வெற்றி பெற்ற மாணவர்களை  தூத்துக்குடி மாவட்ட  மூளை  முடக்குவாதம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் வைத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது  இந்த நிகழ்வில்  தூத்துக்குடி மாவட்ட மூளை முடக்குவாதம் சங்க செயலாளர்  மாஸ்டர் திரு ஸ்டீபன் அவர்கள் மற்றும்  தலைவி திருமதி ஜெயலட்சுமி  அவர்கள், துணை தலைவி ஷாலி,  அவர்கள் மற்றும் பொருளாளர் திரு பத்மநாதன் அவர்கள் ,துணைச் செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.   வெற்றி ப...

தூத்துக்குடி மாவட்டத்தில் 144-ன் கீழ் தடை உத்தரவு

படம்
  தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 13.05.2022 மற்றும் 14.05.2022 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா வினை முன்னிட்டு 12.05.2022 மாலை 6.00 மணி முதல் 15.05.2022 காலை 6.00 மணி வரை மாவட்டம் முழுமைக்கும் 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல் -------------------------       தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 13.05.2022 மற்றும் 14.05.2022 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா வினை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 12.05.2022 மாலை 6.00 மணி முதல் 15.05.2022 காலை 6.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும்; வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகர...

உலக தலசீமியா தினம். தலசீமியா நோய் குறித்து விழிப்புணர்வு. .

படம்
  தூத்துக்குடி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  உலக தலசீமியா தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், re இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. ------------------------- தூத்துக்குடி அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக தலசீமியா தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  08.05.2022 அன்று கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, தலசீமியா நோயாளிகளை ஊக்குவிக்கும் விதமாக பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களிடம் தலசீமியா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தாய்மார்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தலசீமியா நோய் எப்படி ஏற்படுகிறது, அதனை தடுப்பது எப்படி என்பது குறித்து மக்களிடையே விழிப்பணாவு ஏற்படுத்த ஆண்டுதோறும் மே மாதம் 8 ஆம் தேதியை உலக தலசீமியா தினம் கொண்டாடப்படுகிறது. தலசீமியா இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் 1994 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதிய...

‘கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்”

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி தமிழக அரசின் சாதனை குறித்த ‘கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்” என்ற புத்தகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள். ---------------------------- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திரவிய ரத்தின நகர் பகுதியில், தமிழக அரசின் ஒராண்டு நிறைவை முன்னிட்டு, நகர்புற அடர்காடு வளர்ப்பு முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், ஒராண்டு சாதனை மலரை, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள், வெளியிட, மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.ஜெகன்பெரியசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். தூத்துக்குடி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி.தி.சாருஸ்ரீ,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு  பொறுப்பேற்று ஓராண்டிற்குள் தூத்துக்குடி  மாவட்டத்தில் முதல்வரின் முகவரி த...