இடுகைகள்

அறங்காவல் குழு தலைவர் க.செல்வ மாரியப்பன் , வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

படம்
  தூத்துக்குடி மேலூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலின் அறங்காவல் குழு தலைவராக.  க.செல்வ மாரியப்பன்   தேர்வு செய்யப்பட்டுள்ளார்  தமிழ்நாடு வ உ சி பேரவை தலைவரும், ஓய்வு பெற்ற நகராட்சி-  மாநகராட்சி மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவருமான திரு  க.செல்வ மாரியப்பன் அவர்கள்   தூத்துக்குடி மேலூர் கிராம தேவதை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தான அறங்காவல் குழு தலைவராக  தேர்வு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து    21-7-2023 வெள்ளி கிழமையன்று காலை 10 மணிக்கு  தூத்துக்குடி பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள    வ.உ.சிதம்பரனார் - சிலைக்கு மாலை அணிவிக்க வந்த  திரு  க.செல்வ மாரியப்பன் அவர்களுக்கு  சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது          பின்னர்  பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ உ சி சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்  இந்த நிகழ்ச்சியில் திரு. B. பொய் சொல்லான்  மற்றும் தூத்துக்குடி வணிக சங்க மாவட்ட தலைவர் P. விநாயகமூர்த்தி அவர்களும் திரு ....

" INSTENT உறவுகள் " வாரம் ஒரு கவிதையில்

படம்
    வாரம்  ஒரு கவிதையில்    "INSTENT உறவுகள் "  - கவிதையை எழுதி வாசிப்பது - திரு" மின்னல்" அம்ஜத்  அவர்கள்

பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி விழா

படம்
    கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி விழா தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்தி நகர் பகுதியில் இயங்கி வரும் இந்து அரிசன துவக்கப்பள்ளி பழமையான பள்ளிக்கூடம் என்பது மட்டுமல்ல வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளிக்கூடம் ஆகும் இந்தப் பள்ளியானது தூய்மை செய்யும் தொழிலாளர்களின் சமூகத்தைச் சார்ந்தவர்களால் தமிழ்நாட்டிலேயே நடத்தப்பட்டு வரும் ஒரே ஒரு அரசு தொடக்கப்பள்ளி இதுவே ஆகும் இந்த காந்திநகர் பகுதியில் குடியிருந்து வந்த அருந்ததியர் மக்களும், மீனவ மக்களும், தங்களது பிள்ளைகளுக்காக ஆரம்பக் கல்விக்காக தொடக்கப்பள்ளி பள்ளியை  ஓலை குடிசையில்  ஓர் ஆசிரியர் பள்ளியாக 1957-இல் தொடங்கப்பட்டது பின்னர் 1956 ல் அப்பகுதி மக்களின் குடியிருப்பிற்கு பட்டா பெறவும் அருந்ததியர் நல சேவா சங்கம் ஆரம்பித்த காலத்தில் இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு பட்டா பெறவும் இப்பள்ளியை விரிவாக்கம் செய்ய அப்போதைய கல்வியாளரும் சட்டமன்ற உறுப்பினர் திரு APC. வீரபாகு B.A அவர்களும் மற்றும் திரு P.PM.T பொன்னுச்சாமி நாடார், அவர்களின் பெரும் முயற்சியாலும் இப்பகுதி மக்களுக்கு இலவச வ...

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “ உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி

படம்
நாள்: 26.06.2023 தூத்துக்குடி மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “ உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி     தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு “ உயர்வுக்கு படி” மற்றும் “கல்லூரி கனவு” வழிகாட்டல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.  இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த வழிகாட்டல், கல்விக்கடன், உதவித்தொகை, முதல் பட்டதாரி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் மற்றும் விடுதியில் தங்கி படித்தல் போன்ற உதவிகள் செய்து தரப்படும்.       இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியானது முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை 27.06.2023 அன்று செயின்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப்ப...

மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி

படம்
சாயர்புரம் டாக்டர். ஜி. யு. போப் பொறியியல்  கல்லூரியில் இந்திய அரசு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் கீழ் செயல்படும்   தூத்துக்குடி மாவட்டம்  நேரு யுவகேந்திரா  மற்றும் நாட்டு நல பணித்திட்ட சார்பாக மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி கடந்த 16-6-2023  வெள்ளி  கிழமை அன்று.     நடைபெற்றது. சாயர்புரத்தில் உள்ள டாக்டர். ஜி. யு. போப்  பொறியியல்  கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நேரு யுவகேந்திரா  மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கருத்தரங்கம் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் திரு. ரா.ராஜேஷ் ரவிச்சந்தர் தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் டாக்டர் ஜே.ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.இசக்கி  முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மாணவ மாணவிகள்  உற்சாகமாக  கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர்...

நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் : அமைச்சர் திரு.கே.என்.நேரு தகவல்

படம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி  நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை  விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் ------------------------------------------------------------------------------     தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.56.65 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரம் மற்றும் 15வது நிதிக்குழுத் திட்டங்களின்கீழ் முடிவுற்ற பணிகளை மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தலைமையில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு அவர்கள் இன்று (26.05.2023) திறந்து வைத்தார். ரூ.10.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடம், ரூ.7.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டோபிகானா, ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சிக்குட்பட்ட 8 பகுதிகளில் பூங்கா, ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வளமீட்பு மையம், சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா, ரூ.2 கோட...

விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம் :

படம்
                                                மாணவர்கள் விடாமுயற்சியுடன் தொடர்ந்து உழைத்தால் வெற்றி நிச்சயம்தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் இ.ஆ.ப., அவர்கள் அறிவுறை --------------------------------------------------------------------------------------------------------     தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 56 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கான உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான நான் முதல்வன்-கல்லூரி கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.05.2023) மாணவர்களை ஊக்கப்படுத்தி பாராட்டி தெரிவித்ததாவது:       பள்ளிக் கல்விக்கு பிறகு மாணவர்கள் அனைவரும் அர்த்தமுள்ள உயர் கல்வி படிப்புகளை தொடரச் செய்வதே நான் மு...