இடுகைகள்

தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு " காமராஜர் " மஹாலில் கொரானா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலகம் சார்பாக  தூத்துக்குடி பிரையண்ட் நகர் 5வது தெரு *காமராஜர் மஹாலில்*  *29-06-2021*  செவ்வாய்க்கிழமை  அன்று காலை *9-30* மணியிலிருந்து கொரானா தடுப்பூசி  முகாம் நடைபெறுகிறது. 18 வயதிற்கு கொள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள் தடுப்பூசி போட விருப்பமுள்ளவர்கள்     கொடுக்கப்பட்டுள்ள   9443132119   என்ற   தனது வாட்ஸ் அப் எண்ணில்      தொடர்பு கொண்டு  தங்களுடைய பெயர் மற்றும்  செல்போன் என்னை  பதிவு செய்து கொள்ளுமாறு   பணிவுடன் கேட்டுக் கொள்கிறார்  "சுகன்யா S செந்தில் குமார் "    மேலும்  நண்பர்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு கொரானா இல்லாத தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு  வழங்கும் மாறும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்

மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம்

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சுகாதார திட்ட பணிகள் இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., தலைமையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில்  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கிகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அன்று (25.06.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுகாதார திட்ட பணிகள் இயக்க திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.உமா, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனை மட்டுமின்றி காப்பீட்டு திட்டத்தில் இணைக்கபட்டுள்ள தனியார் மருத்துவமனையிலும் கொரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்கள். எளிய மக்களுக்கு உதவிடும் திட்டமான காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி மற்ற நோயாளிகளுக்க...

கொரோனா கட்டுப்பாட்டு அறை (WAR ROOM ) அலுவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ்

படம்
  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை (WAR ROOM )     அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார் -------------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 24  x  7 (WAR ROOM )   பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (24.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு அலுவலர்கள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறை   (WAR ROOM)  பல்வேறு துறை அலுவலர்கள் ஒன்றாக ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றினீர்கள். அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன். கொரோனா ஊரடங்கு நேரத்திலும் பணிக்கு வருவது ஒரு கடினமான விசயமாக இருந்திருக்கும். ஒருசில க...

கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பாராட்டு

படம்
            தூத்துக்குடி  மாவட்டத்தில் கடந்த வாரம்; சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 41 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.   ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் கடந்த 17.06.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை குற்ற பின்னணி உள்ள 3 போக்கிரிகள் மற்றும் ஒரு எதிரியை கைது செய்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அருள், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முதல் நிலை காவலர்கள் திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்விரோதம் காரணமாக சங்கர் என்பவரை கொலை செய்ய முயன்ற எதிரிகள் மூவர...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் : அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

படம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி  வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும் உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் சீர்காட்சி கிராமத்தில் 60000 கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.   ----------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குமாரபுரம், உடன்குடி பேரூராட்சி வடக்கு காளான்குடியிருப்பு ஆகிய பகுதிகளில்  கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்க நிகழ்ச்சியும், உடன்குடி வட்டம் வெள்ளாளன்விளையில் 30000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் சீர்காட்சி பகுதியில் 60000 கொள்ளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி பணிகள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (20.06.2021) நடைபெற்றது.       ...

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் மளிகை பொருள்கள் : அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் . வழங்கினார்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிந்தசாமி கலையரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்களை 400 நபர்களுக்கு மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள்  வழங்கினார். ---------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கோவிந்தசாமி கலையரங்கத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி உள்பட 15 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (18.06.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன் வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு  மாத சம்பளமின்றி பணியாற்றும் அர...

சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு விருது வழங்க தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு சுதந்திர தின விழா விருதுகள் வழங்க தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப, அவர்கள் தகவல் ----------------------- சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் 2021ஆம் ஆண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரியும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு சுதந்திர தின விழா விருதுகள் வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை...