இடுகைகள்

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ,மாவட்ட சிறுதொழில் சங்கம், மாவட்டம் தொழில் மையம் இணைந்து Entrepreneurs Clinic துவக்கம்

படம்
     --------------------- தூத்துக்குடி ராம்நகர் துடிசியா அரங்கில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தூத்துக்குடி மாவட்ட சிறுதொழில் சங்கம் (துடிசியா), தூத்துக்குடி மாவட்டம் தொழில் மையம் இணைந்து     Entrepreneurs Clinic துவக்க நிகழ்ச்சி இன்று (15.07.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.. அவர்கள் பங்கேற்று Entrepreneurs Clinic சேவையை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப.. அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் வகையியை வழங்க வேண்டும் என தெரிவித்தார்கள். அதனடிப்படையில் தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடி துடிசியாவில் இச்சேவை துவக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி பகுதி மக்களுக்கு தொழில் தொடங்குவது என்பது ரத்தத்தில் ஊறியுள்ளது. வெள்ளையனை எதிர்த்து கப்பல் ஓட்டிய வ.உ.சிதம்பரனார் பிறந்த மண் இது. கோவிட் 19 கொரோனா பாதிப்பால் தொழில் து...

தூத்துககுடியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா

படம்
  அனைவருக்கும் இலவச கல்வி தந்த   பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்  119வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் அனைத்து தரப்பினராலும் பெருமிதத்தோடு கொண்டாடப்பட்டது .                                         அந்த வகையில் தமிழ் நாடு காமராஜ் பேரவை சார்பில் தூத்துக்குடி  பிரையண்ட் நகர்  பிரதான பகுதியில்  அலங்கார மேடையில்  பெருந்தலைவர் திரு உருவ படம் அமைத்து   தமிழ்நாடு காமராஜ் பேரவையின் நிர்வாக பெருமக்களால் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது . பின்னர்   நிர்வாகிகளால் கேக் வெட்டி, இனிப்புகள் , பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது                                                                     பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் தன்னலமற்ற சேவைகளையும் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி  வ...

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையio

படம்
 . தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.  ----------------------- தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று (15.07.2021) நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார்.  இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இன்று புறக்காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விற்கப்படும் மீன்களுக்கு நல்ல மரியாதை உள்ளது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்கள் சென்னை, பெங்களுர் மற்றும் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செ...

தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

படம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். ------------------------------ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் தன்னார்வலராக பணியாற்றிய மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இன்று (14.07.2021)  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு தன்னார்வலராக பணியாற்றிய 36 மாணவர்களுக்கும், 12 தொண்டு நிறுவனங்களுக்கும், 30 தன்னார்வலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நேரத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துள்ளீர்கள். மாவட்ட நிர்வாகத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலர்களும், காவல் துறையின...

பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

படம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ரா ஜ் இ.ஆ.ப.இ அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். -------------------- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமலாபுரத்தில் உள்ள தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் உழவர்களின் கூட்டு நிறுவனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்  இ.ஆ.ப.இ அவர்கள் இன்று (14.07.2021)  நேரில் சென்று ஆய்வு செய்தார்.  விளாத்திகுளம் காமலாபுரத்தில் 1118 விவசாயிகளின் பங்களிப்புடன் தூத்துக்குடி பயறு உற்பத்தியாளர் கம்பெனி லிமிடெட் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உளுந்துஇ பாசி பயறு  சிறுதானியங்கள் உட்பட பல்வேறு விதைகள் தரம் பிரிக்கப்பட்டு முதல் தர விதைகள் சான்றிதழுடன் விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் பணிகள் மற்றும் பயறு வகைகள் தோல் உரிக்கப்பட்டு மதிப்பு கூட்டு பொருளாகி விற்பனை செய்யும் பணிகள்இ செக் நல்லெண்ணெய் ,  கடலை எண்ணெய் ,  தேங்காய் எண்ணெய் ,  சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள்...

ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு உரம் தயாரிக்கும் எந்திர கட்டிட திறப்பு

படம்
தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிடத்தினை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். ---------------- தூத்துக்குடி குமாரகிரி ஊராட்சி கூட்டாம்புளியில் தூத்துக்குடி விமான நிலைய சமுக பொறுப்பு நிதி ரூ.85 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிட திறப்பு  நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (13.07.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் கலந்துகொண்டு  திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திர கட்டிடத்தினை திறந்து வைத்தார். மேலும் குப்பைகளை எடுத்து வர பயன்படுத்தப்படும் மின்சாரத்தால் இயங்கும் மூன்று சக்கர வாகன பணிகளை துவக்கி வைத்தார். ...

எட்டையபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, -. 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான மாணவியர் சேர்க்கை

படம்