இடுகைகள்

ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை.

படம்
 தூத்துக்குடியில் ரயில் முன் பாய்ந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தூத்துக்குடியில் மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி ரயில்வே  போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தியதில், அங்கு இறந்து கிடந்தவர் 1 ஆம் கேட் அருகில் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் செல்வம் (43) எனத் தெரியவந்தது.  இவருக்கு திருமணமாகி மனைவி மாரியம்மாள் (36) என்ற மனைவியும் நாகலட்சுமி (15),  சுந்தர் (8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். தூத்துக்குடி அலங்காரதிட்டு பகுதியில் சொந்தமாக பட்டறை அமைத்து தச்சு வேலை செய்து வருகிறார். கடந்த சனிக்கிழமை காலை 9 மணிக்கு தனது வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர். நேற்று வரை பட்டறையிலேயே தங்கி வேலை பார்த்து வந்து  உள்ளார். தனது மனைவியிடம் தொலைபேசி வாயிலாக மட்டுமே பேசி உள்ளார்.  இந்நிலையில் இன்று அதிகாலை...

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் புதிய பேருந்து நிலைய சாந்தி பேக்கரியின் மக்ரோன் ஸ்டால் திறப்பு : பொதுமக்கள் மகிழ்ச்சி வரவேற்பு

படம்
  இந்திய ரயில் நிலையங்களில் பூகோள ரீதியான சிறப்பு வாய்ந்த பொருள்களை பிரபலப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஒன் ஸ்டேஷன் ஒன் புராடைக்ட் என்ற அடிப்படையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன் சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி 16-07-2022 சனிகிழமை   மாலையில் அன்று   தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரயில் நிலையத்தில் நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் திரு சி. நடராஜன் அவர்கள் ,      தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன்  ஸ்டால்லை தொடங்கி வைத்தார்கள் இவ் நிகழ்ச்சியில் தூத்துக்குடி இரயில் நிலைய அதிகாரி நாதலால் மீனா -  துணை வணிக மேலாளர் செண்பகராஜ்  மற்றும் தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய. சாந்தி பேக்கரியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர் இந்த மக்ரூன் ஸ்டால் 16-07-2022 முதல்  30-07-2022  வரையில மட்டும் இயங்கும்.  இது 15 நாட்களுக்கு ஒரு முறை  சங்கிலி தொடர் போல்  தொடரும் என  வர்த்தக முதன்மை ...

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

படம்
   தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்; 29.06.2022 அன்று முற்பகல் 10.30 மணி அளவில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள்; தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில்; வைத்து நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தர்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள். எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக தட்டச்சு செய்தோ அல்லது தெளிவாக எழுதியோ அன்றைய தினம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் நேரில் அளித்திடலாம்.  இந்நேர்வில் பொதுமக்களும், நுகர்வோர்களும்  பெயர் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தர்களின் சேவையில் குறைபாடுகள், டெப்பாசிட் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் (Subsidy)   உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபர்கள் மீ...

தூத்துக்குடி இரயில் நிலையத்தில் ஒன் ஸ்டேசன் - ஒன் புராடைக்ட் திட்டம் துவக்கம்

படம்
  இந்திய ரயில் நிலையங்களில் பூகோள ரீதியான சிறப்பு வாய்ந்த பொருள்களை பிரபலப்படுத்தும் திட்டத்தின்கீழ் ஒன் ஸ்டேஷன் ஒன் புராடைக்ட் என்ற அடிப்படையில் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சாந்தி பேக்கரியின் சிறப்புமிக்க தூத்துக்குடி மக்ரூன் சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி 23-06-2022 வியாழன்  அன்று மாலை  தூத்துக்குடி ரயில் நிலையத்தில்  தொடங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரயில் நிலைய வர்த்தக முதன்மை ஆய்வாளர் திரு சி நடராஜன் அவர்கள் முன்னிலையில் தூத்துக்குடி ரயில் நிலைய மேலாளர் திரு செந்தில்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி ரயில் நிலைய அதிகாரி சுதர்சன் தாஸ் மற்றும் முன் பதிவு அதிகாரி திரு P. ரமேஷ் அவர்களும் மற்றும் ரயில்வே ஓய்வுபெற்ற முதன்மை எழுத்தாளர் திரு. G ராமராஜ் மற்றும்  தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய. சாந்தி பேக்கரியின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

Dr.அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்  தூத்தடிக்குடி 28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி கிளை இணைந்து நடத்திய      கண் சிகிச்சை முகாம் 

படம்
 

தூத்துக்குடி 28 வார்டு பகுதியில் கண் சிகிச்சை முகாம் .

படம்
  தூத்துக்குடி  மாநகராட்சி  28வது  வார்டு பகுதியில்  டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்  28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி கிளை இணைந்து    16-06-2022  வியாழன்  அன்று   V.P சிந்தன் படிப்பகத்தில் கண் சிகிச்சை முகாம்  நடத்தப்பட்டது   28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் காரியதர்சி தோழர் P. அழகு பாண்டியன் அவர்கள் தலைமையில்   நடைபெற்ற இந்த முகாமில்   தூத்துக்குடி மாநகராட்சி  28வது வார்டு மன்ற உறுப்பினர் திருமதி   ராமு அம்மாள்  மற்றும் தோழர் P. சங்கர், தோழர் S. முத்து , தோழர்  ஜவகர்  ஆகியோர் கலந்து கொண்டனர் டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை மற்றும்  28வது வார்டு மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி யின்கிளை இணைந்து  நடத்திய முகாமில்  தூத்துக்குடி 28வது  வார்டு  பகுதி பொதுமக்கள்  ஏராளமானோர் கலந்து  கொண்டு கண் பரிசோதனையை   மேற்கொண்டு பயன் பெற்றனர் இந்த முகாமில்  தூத்துக்குடி        ...

தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி கிளை சார்பாக செயற்குழு கூட்டம்

படம்
  தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி கிளை சார்பாக செயற்குழு கூட்டம் 28-5-2022  அன்று சனிக்கிழமை காலை 10 மணி அளவில் தூத்துக்குடி விவிடி வாட்டர் டேங்க் (விவிடி பூங்கா) அருகில் நடைபெற்றது     ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி மாநகரத் தலைவர் திரு ஆர் மாடசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு முன்னாள் என்.ஜி.ஓ தலைவர்  அந்தோணிசாமி  மற்றும் முன்னாள் செயலாளர் A. ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் துத்துக்குடி பகுதியிலிருந்து நகராட்சி மற்றும்  மாநகராட்சி ஒய்வூதியர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில்  ஓய்வூதியர்களின் சேமநல நிதி வட்டி நகராட்சி – மாநகராட்சி- அலுவலர்கள் ஊழியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்த மாநகராட்சி மேயர் திரு ஜெகன் பெரியசாமி அவர்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் திருமதி சாய் ஸ்ரீ I.A.S அவர்களுக்கும்  நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கப்பட்டது  சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா  2022 செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையா...