இடுகைகள்

குரூஸ் பர்ணாந்து அவர்களின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் S. ஏசாதுரை மாலை அணிவித்து மரியாதை

படம்
 மக்கள் போற்றும் மகத்தான தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நல்லாசியுடனும்  , மாண்புமிகு  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நல்லாசியுடனும்... கழகத்தின் நிரந்தர ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஐயா ஓ பன்னீர்செல்வம் அவர்கள் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த கொடை வள்ளல் ராவ் பகதூர் ஐயா குரூஸ் பர்ணாந்து அவர்களின் 153வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்  S. ஏசாதுரை அவர்கள் தலைமையி   மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர்  S. ஏசாதுரை அவர்கள் தலைமையில் அன்னாரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  இந்த நிகழ்ச்சியில் கலந்து VTதங்கம், EX. வட்ட செயலாளர் அந்தோணி செல்வராஜ்,  வடக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் பழனிச்சாமி பாண்டியன்.  வட்டச் செயலாளர்                  E. இசைக்கி முத்து , மத்திய வடக்கு பகுதி அம்மா பேரவை பொருளாளர் M.S மாடசாமி  , வடக்கு மாவட்ட அமைப்பு  சாரா ஓட்டுனரனி  இனைசெயலாளர்...

தமிழ்நாடு மருத்துவத்துறை அனைத்து ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தின் கூட்டம்

படம்
   தூத்துக்குடியில் கடந்த 6-11-2022  அன்று காலையில் தமிழ்நாடு மருத்துவத்துறை அனைத்து ஊழியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலிய உதவியாளர் சங்கத்தின் கூட்டம் மாநிலத் துணைத் தலைவர் திரு எஸ் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் சங்கத்தின் மாநில ஆலோசகர் திரு மு வெற்றிவேல் அவர்கள் கலந்துகொண்டு சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் மற்றொரு விழாவினை பற்றியும் பணியாளர்களின் குறைபாடுகளை பற்றியும் எடுத்துரைத்தார்     இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட கிளை சங்கத்தின் சார்பில் வருகின்ற 13/11/ 22 .அன்று கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறுகின்ற நமது சங்கத்தின் முப்பெரும் விழாவின் கலந்து கொள்வது சம்பந்தமாகவும் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பணியாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது   இதில் தலைமைச் சங்கம் கீழ்க்கண்ட சில கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது  தீர்மானம் 1.  மருத்துவமனையில் போதுமான நிரந்தர பணியாளர்கள் இல்லை ஆகையினால் நிரந...

தூத்துக்குடியில் மேம்பாலம் பணிகள்: போக்குவரத்து மாற்றம் - ஆட்சியர் தகவல்!

படம்
  தூத்துக்குடியில் மேம்பாலம் பணிகளில்  32 ராட்சஷ காண்கிரிட் தூண்கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (நவ.2) முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட  மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் செய்திக்குறிப்பு :  தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வட்டம், திருச்செந்தூர் வஉசி துறைமுகம்,ஸ்பிக் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேற்படி பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலைபணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் ராட்சஷ காண்கிரிட் தூண்கள் 32 எண்ணம் அதற்கான இடத்தில் பொறுத்தும் பணி மிகவும் முக்கியமானது ஆகும்.  மிகுந்த கவனத்துடன் இப்பணிகளை செய்வதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர், தூத்துக்குடி திட்ட செயலாக்க பிரிவு முனைப்புடன் அதற்கான ஆயத்த பணிகளை செய்து மேற்படி  பாலம் 2023 பெப்ரவரி மாத்த்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்நேர்வில் இப்பாலம் அமைப்பதில் முக்கிய பணியான 32 தூண்களை பொறுத்தும் பணி 2.11.2022 முதல் 11.11.2022 வரை நடைபெறவுள்ளது. •...

சிறுபான்மையின மாணவ - மாணவியர்களுக்கு. மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

படம்
  03.11.2022 சிறுபான்மையின                                மாணவ - மாணவியர்களுக்கு.            மத்திய அரசின் கல்வி உதவித்தொகை       விண்ணப்பிக்க கால நீட்டிப்பு          தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்             தமிழ்நாட்டில் வசிக்கும் இசுலாமியர், கிறித்துவர், சீக்கியர், பார்சி, ஜெயின் மற்றும் புத்த மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய -  மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23-ஆம் கல்வியாண்டில் பள்ளி படிப்பு (ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை)பயிலும் மாணவஃமாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கு 15.11.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (11-ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை) மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி (தொழிற்கல்வி- தொழில்நுட்பக்கல்வி) பயிலும் மாணவ - மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு கால அவகாசம் 30-11-2022 வரை,...

பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையில் தீ

படம்
தூத்துக்குடியில் சிவன் கோயில் அருகே பூஜை பொருள் விற்பனை செய்யும் கடையில்    ஏற்பட்ட   தீவிபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் தூத்துக்குடியில் உள்ள பழமைவாய்ந்த சிவன் கோயில் அருகே உள்ள மில்லர்  புரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக பூஜை பொருள் மற்றும் கொலு பொம்மைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.  நேற்று இரவு வழக்கம்போல் கடையை அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென கடை தீப்பிடித்து எரிந்துள்ளது.       இதையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து  தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த பூஜை பொருட்கள் மற்றும் கொழு பொம்மைகள் உட்பட ரூபாய் .2லட்சம் மதிப்புள்ள பாெருட்கள் எரிந்து சேதம் ஆனது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது  இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறா

அனைவருக்கும் நமது எழுத்தாணியின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

படம்
 

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா ஆரம்பம்

படம்
                              நாள்.22.10.2022 தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக  புத்தகத் திருவிழா – 2022 நவம்பர் 22 முதல் நவம்பர் 30 வரை நடைபெறவுள்ளது  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல். ------------------------------- தூத்துக்குடி ஏ.வி.எம். மஹாலில் மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகத் திருவிழா – 2022, நவம்பர் 22 முதல் நவம்பர் 30 வரையில் (22.11.2022  -30.11.2022) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.  புத்தகத் திருவிழா – 2022 தொடர்பான இலச்சினையை மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப. அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு.பெஜெகன் அவர்கள், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சி.சண்முகை...