இடுகைகள்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

படம்
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.  கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் ஆண்டுதோறும் நடைபெறும் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நிகழாண்டில் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என மாவட்ட நிர்வாகமும் கோவில் நிர்வாகமும் இணைந்து அறிவித்தது.  இதையடுத்து இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி கலந்துகொண்டு கொடியேற்றினார். கொடியேற்றம், திருப்பலி சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.   பொதுமக்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. பக்தர்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து கண்காணிக்கப்பட்டது. தொடர்ந்து திருவிழாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் வழக்கம்போல் மக்கள் பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. த...

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் நகராட்சி சொரோனா தொற்று கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

படம்

மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைகூட்டம்

படம்
23.07.2020  தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம், தூய பனிமய  அன்னையின் பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகளில்பொதுமக்கள்கலந்துகொள்ள வேண்டாம். தங்களது வீட்டில் இருந்தே யூடுயுப் மற்றும் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று காலத்தில் பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் மற்றும் மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் வேண்டுகோள்  -------------------------------------------------------------- தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஆலோசனைகூட்டம்மாவட்டஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரிஇ இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று(23.07.2020) நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில்இ தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்இ தூய பனிமய அன்னையின் பெருவிழா ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்பாகவும்இ திருவிழா நேரடியாக ஒளிபரப்புவது செய்வது தொடர்பாகவும் ஆலோ...

தூத்துக்குடி பிரையண்ட் நகரில் கொரனா பரிசோதனை முகாம்

படம்
  கொரனா பரவுவதை கட்டுப்படுத்திட  22 -7- 2020 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  வணிகர்கள் மற்றும்  பொதுமக்கள் பரிசோதனை செய்து கொள்ள ... தூத்துக்குடி மாவட்ட சுகாதரத் துறையால் ..  தூத்துக்குடி பிரையண்ட் நகர் காமராஜ் மகாலில் பரிசோதனை முகாம்   நடைபெற்று வருகிறது 

அம்மாவாசை தினத்தில் கடற்கரை மற்றும் ஆற்றங்கரையில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க காவல் துறை வேண்டு கோள்

படம்
கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், குற்றவியல்  விசாரணை நடைமுறைச்சட்டம் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாலும் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி அமாவாசை நாளில் சடங்கு, சம்பிரதாயங்கள் செய்வதற்காக  தாமிரபரணி ஆற்றங்கரை மற்றும் கடற்கரையோரங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்து செல்லும் வழிகளில் ஆற்றங்கரை  ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில்மற்றும்கடற்கரையோரங்களில் ஆண்டுதோறும் ஆடி, அமாவசை நாளில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம்  மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும் நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.                                                   இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் க...

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தலா ரூ.17 லட்சம் மதிப்பில் கொரோனா தொற்று பரிசோதனை 2 ஆர்டிபிசிஆர் கருவிகளை துவக்கி வைப்பு .

படம்
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா  தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாண்புமிகு சுகாதாரத்துறை  அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் இன்று (18.07.2020) நடைபெற்றது. கூட்டத்தில் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வகைகள் வழங்கிடவேண்டும்.இதற்குதேவைப்பட்டால் கூடுதலாக பணியாளர்களை தற்காலிக அடிப்படையில் ஈடுபடுத்திட வேண்டும். அரசு தெரிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய சிசிச்சைகளை அளித்திட வேண்டும். தூத்துக்குடி மருத்துவமனையில் ஆக்சிசன்  லைன் படுக்கைகளுக்கு ஏற்றவாறு தேவையான அளவு அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்கள். கூட்டத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்...

பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாள் விழா

படம்
தூத்துக்குடி பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்கத்தில் பெருந்தலைவர் காமராஜரின் 118 வது பிறந்த நாள் விழா பெருந்தலைவர் காமராஜர் மஹாலில் கொண்டாடப்பட்டது. பிரையண்ட் நகர் ஐக்கிய நாடார்கள் சங்க நிர்வாகிகள் சட்ட ஆலோசகர்கள் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர். தூத்துக்குடி பாசகரங்கள் முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.