இடுகைகள்

இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை : மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் வட்டம் சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் மதுரை - தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு; நிலஎடுப்பு செய்வது தொடர்பாக பொது விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17.09.2020 அன்று நடைபெறுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் ------------------------------------------------------------------------------------------    தூத்துக்குடி மாவட்டத்தில் மதுரை தூத்துக்குடி இருவழி அகல இரயில்பாதை அமைக்கும் பணிக்கு ஓட்டபிடாரம் வட்டம், சவரிமங்கலம், தெற்குவீரபாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் நிலஎடுப்பு செய்வது தொடர்பாக தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டம் 1997 பிரிவு 3(2)- ன் கீழான அறிவிப்பு நாளிதழில் பிரசுரம் செய்யப்பட்டு அதன் பேரிலான பொது விசாரணை 21.04.2020 அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற உத்தரவிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் (ஊழஎனை -19) நோய் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டது மற்றும் நிர்வாக காரணத்தினால் மேற்படி பொது விசாரணை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்ப...

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளையின் மூலம் 19 நபர்களுக்கு ரூ.18.62 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகள் : அமைச்சர் வழங்கினார்

படம்
          தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எட்டயபுரம் கிளையின் மூலம் 19 நபர்களுக்கு ரூ.18.62 லட்சம் மதிப்பிலான கறவை மாடுகளையும் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் வழங்கினார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் நடுவிற்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கடன் உதவிகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.09.2020) நiபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளையும், மாவட்ட மத்தி...

திருநங்கைகளுக்கான நிலையான வாழ்வாதார திட்டம் :

படம்
  தூத்துக்குடி ஒன்றியம் புதுக்கோட்டையில் திருநங்கைகள் சிறப்பு சுய உதவிக்குழுவினர் பாக்குமட்டை தயாரிக்கும் அலகினை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் திறந்து வைத்தார். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஒன்றியம் புதுக்கோட்டையில் மகளிர் திட்டத்தின் மூலம் கனிமம் மற்றும் சுங்கத்துறை நிதியின் மூலம் திருநங்கைகளுக்கான நிலையான வாழ்வாதார திட்டத்தின்கீழ் ரூ.4.25 லட்சம் மதிப்பில் சேலன்ஞ் சிறப்பு சுய உதவிக்குழுவினர் பாக்குமட்டைகள் தயார் செய்தல் அலகினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (09.09.2020) நiடை பெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் கலந்துகொண்டு பாக்குமட்டைகள் தயார் செய்தல் அலகினை திறந்து வைத்து பாக்குமட்டைகள் தயாரிக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி.சண்முந...

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 100% மாணவர் சேர்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : மாவட்ட திறன்குழு கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் உரை

படம்
                                                                                           தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் மாவட்ட திறன்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ------------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் மூலம் செப்டம்பர் 2020 மாதத்திற்கான மாவட்ட திறன்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (08.09.2020)  அன்று நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்து...

மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு கடன்

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு கடன் அட்டைகள் வழங்கப்பட உள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------       தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்கள், உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு  மத்திய அரசு அறிவிப்பின்படி மீனவர் கடன் அட்டை வழங்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.                                                                                                                    ...

மீன்வளத்தினை பெருக்கிட மானியம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

படம்
  தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வளத்திட்டத்தின் கீழ் மீன்வளத்துறையின் மூலம் மீன்வளத்தினை பெருக்கிட மானியம் வழங்கப்படுகிறது - மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் ------------------------------------------------------------------------------------------       தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதம மந்திரி மீன்வளத்திட்டத்தின் கீழ் மீன்வளத்துறையின் மூலம் மீன்வளத்தினை பெருக்கிட 2020-2021-ம் நிதி ஆண்டு முதல் 2024-2025 –ம் நிதி ஆண்டு வரை ஐந்து நிதி ஆண்டுகளுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுபிரிவினருக்கு 40மூ சதவீத மானிய உதவியும், தாழ்த்தப்பட்டஃ பழங்குடியினருக்கு மற்றும் பெண்களுக்கு 60மூ மானிய உதவியும் புதிய மீன் மற்றும் இறால் பண்ணைக்குட்டை அமைத்தல், உயிர்கூழ் முறையில் மீன்வளர்ப்பு செய்தல், வண்ணமீன் வளர்ப்பு திட்டம், மீன்விற்பனை செய்பவர்களுக்கு இரு சக்கர வாகனத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டி வழங்குதல், கடற்பாசி வளர்த்தல், கூண்டுகளில் மீன்வளர்த்தல், ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கான படகுகள், ஒருங்கிணைந்த கடல் வண்ண மீன்வளர்த்தல், மற்றும் கடல்; வண்...

வ.உ.சி 149 வது பிறந்த நாள் நிகழ்ச்சிகள்

படம்
 வ உ சி அவர்களின் 149 ஆவது பிறந்த நாளில்  அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சைவ வேளாளர் இளைஞர் பேரவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டைல்ஸ் மகாராஜன் மற்றும்  ஓம்சக்தி சைக்கிள்  மகாராஜன் மாலை  அணிவித்து வணங்கினார்கள்