இடுகைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலை பேசி எண்கள்

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண், வாட்சாப், சி விஜில் என்னும் மொபைல் ஆப், ஹெல்ப் லைன்மற்றும் நிகரி (FAX) மூலம் தெரிவிக்கலாம்.தேர்தல்பார்வையாளர் களை நேரில் சந்தித்து புகார் அளிக்க விரும்பினால் தூத்துக்குடி ஸ்பிக் சாகர் சதன் விருந்தினர் மாளிகையிலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திலும் நேரில் சந்தித்தும் புகார் அளிக்கலாம் - மாவட்ட தேர்தல் அலுவலர் & மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  -------------------------------தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள், 2021 முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை ஆய்வுசெய்யவும்,தேர்தல்செலவினங்களை மேற்பார்வையிடவும் இந்திய தேர்தல் ஆணையத்தால் 5 தேர்தல் பொது பார்வையாளர்களும், ஒரு தேர்தல் காவல் பார்வையாளரும், 3 தேர்தல் செலவின பார்வையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  தூத்துக்குடி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு குண்டன் யாதவ், (IRS)அவர்களை 9489947507 என்ற க...

மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பேரணி

படம்
   --- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில தமிழக சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்; மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு இன்று (15.03.2021) கொடியசைத்து துவக்கி வைத்தார்.              . .                                  .                                     .                                                                 பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்ஃமாவட்ட தேர்தல் அலுவலர்...

அமைச்சர் கடம்பூர் ராஜூ வேட்புமனு தாக்கல்

படம்
                                                             வேட்புமனு தாக்கல்                                             கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக கோவில்பட்டி மெயின் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் இருந்து நேற்று அவர் கூட்டணி கட்சியினருடன் கோவில்பட்டி மெயின் ரோடு, மாதா கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு உதவி கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சங்கர நாராயணனிடம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக கடம்பூர் ராஜூவின் மனைவி இந்திரா காந்தி மனு தாக்கல் செய்தார்.                     ...

இந்திய தொழிலாளர் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட கூட்டம்

படம்
  இந்திய தொழிலாளர் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட கூட்டம் தூத்துக்குடி விக்டோரியா சாலையில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது இந்திய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் இன்ஜினியர் J. L குமார் தலைமையில் மாநில தொழிற்சங்க அமைப்பாளர் கவிஞர் குரு நாகலிங்கம் சிறப்புரையாற்றினார் இந்த சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட தலைவராக திரு முருகேசன் மாவட்ட செயலாளராக திரு மின்னல் அம்ஜத். அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்                                                                                                                     இந்த சங்கத்தின் மூலம் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களை உறுப்பினராக சேர்ப்பது நலத்திட்ட உதவிகள் பெற்று தருவது தொழிலாளர்கள் அமைப்பு முறை பற்றியும் புதிய மாவட்ட நிர்வாகிகள்...

சிவன் கோவிலில் நடைபெற்ற தேவார இசைப்போட்டி

படம்
  மஹாசிவராத்திரியை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோவிலில் நடைபெற்ற தேவார இசைப்போட்டியில் நமது SMS Institute மாணவி J.Se.லக்ஷினி சீனியர் பிரிவில் முதல் பரிசும்,ஜெயஶ்ரீ மூன்றாம் பரிசும்,ஜூனியர் பிரிவில் செல்வ ஶ்ரீ ஷன்விகா மூன்றாம் பரிசும் பெற்றனர்.அவர்களை மனதார பாராட்டுகிறோம்.மேலும் இப்போட்டியில் ஆர்வத்துடன்கலந்து கொண்டர்

மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

படம்
------------------- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று (11.03.2021) நடைபெற்றது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு வாக்களிக்க வேண்டும், வாக்களிக்கும்போது நாம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை விவிபேட் இயந்திரம் மூலம் அறிந்துகொள்ளும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.  கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஃ மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பேசியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. நமது மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 1603 வாக்குசாவடிகள் இருந்தது. தற்போது தேர்தல் ஆணையம் 1050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குசாவடிகளை இரண்டாக பிரிக்க சொன்னதன் அடிப்படையில் 2097 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீத...
படம்
      கோவில்பட்டியில்  அண்மையில்  நடைபெற்ற பாரதீய பாரம்பரிய கலைகளை ஒன்றிணைக்கும் சம்ஸ்கார் பாரதி அறிமுக விழாவில் நமது SMS இசை பள்ளி    மாணவிகள் கலந்து கொண்டுபாராட்டும்சான்றிதழும்,   கேடயமும் பெற்றனா்.அனைவரையும் SMS இசைப்பள்ளியின் வாழ்த்துகளோடு இனைந்து நமது எழுத்தாணியும்  வாழ்த்துகிறது