இடுகைகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பல்வேறு திருப்பணிகள் மற்றும் கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பான ஆய்வு

படம்
தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும்  மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ------------------------------------------------------------------------------------------------------------ தூத்துக்குடி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்  பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும், கல்வி நிலையங்கள் அமைக்க இடம் தேர்வு தொடர்பாகவும் மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு மீன் வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை ...

ஐ.டி.ஐ-களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

படம்
                                   வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் (தூத்துக்குடி திருச்செந்தூர் வேப்பலோடை நாகலாபுரம்) மற்றும்  தூத்துக்குடி மாவட்ட தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதற்கு 28.07.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல். ----------------------- 8-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐ.டி.ஐ-களில் சேர www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு விண்ணப்ப கட்டணம் ஆகியவை அனைத்தும் இணையதளத்திலுள்ள விளக்கக் கையேட்டில்   (Prospectus)  தெளிவாக...

தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம்  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.கி.செந்தில் ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல் --------------------- தூத்துக்குடி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.23.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மரு.கி. செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:  தூத்துக்குடி மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2812 எக்டேர் பரப்பளவிற்கு ரூ.23.04 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் 1 ஏக்கர் முதல் அதிகபட்சம் 5 ஏக்கர் வரை பயன்பெறலாம். இதர விவசாயிகள் 12.5 ஏக்கர் வரை நிலத்தில் சொட்டுநீர் பாசம் அமைத்துக்கொள்ளலாம். நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆழ்துறை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைத்திட ரூ.15 ...

மணியாச்சி கிருஷ்னா நகர் பகுதியில் 10.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலை கடை கட்டிட திறப்பு. .

படம்
தூத்துக்குடி மாவட்டம் கே.மணியாச்சி கிருஷ்ணா நகர் பகுதி நேர நியாய விலைக்கடைக்கு ரூ.10.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார்.  ----------------- தூத்துக்குடி மாவட்டம் கே.மணியாச்சி கிருஷ்ணா நகர் பகுதி நேர நியாய விலைக்கடைக்கு ரூ.10.35  லட்சம் மதிப்பில் கdட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.06.2021) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார். இவ்விழாவில் கோவில்பட்டி சட்;டமன்ற உறுப்பினர் திரு.கடம்பூர் செ.ராஜூ அவர்கள் முன்னிலை வகித்தார்.                                                               ...

மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மாதிரி “திட்டம் "

படம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் “மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மாதிரி “திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பில் அதிக ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்கள் பயன்பெறலாம். - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்                               -----       தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்திடும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் “மீன்வளம் மற்றும் நீர்;வாழ் உயிரின வளர்ப்பிற்கான தொழில்முனைவோர் மாதிரி “திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள் ஃ கூட்டு பொருப்பு குழுக்கள் ஃ மீன்வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஃ தனிநபர் தொழில்முனைவோர் ஃ தனியார் நிறுவன...

ரூ.48 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்திற்கு புதிய கட்டிட ம்

படம்
தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்திற்கு புதிய கட்டிடத்தினை மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் திறந்து வைத்தார். மேலும் 20 திருநங்கைகளுக்கு அடையாள அட்டை தலா ரூ.2000 கொரோனா சிறப்பு நிதியை வழங்கினார்.  ------------------------- தூத்துக்குடி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் ளுயுமர்ஐ -ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலகத்திற்கு புதிய கட்டிட திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (30.06.2021) நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் கலந்துகொண்டு ரூ.46 லட்சம் மதிப்பில் மருத்துவர் அறை, சமையல் அறை, 5 படுக்கைகள் கொண்ட சிறப்பு பிரிவு, மனநலம் தொடர்பாக அறிவுரை வழங்கும் அறை, சட்ட பிரிவு அறிவுரை வழங்கும் அறை, மைய நிர்வாகி அறை, தொழில்நுட்ப பணியாளர்கள் அறை மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்டவைகளுடன் 1985 சதுர அடி பரப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.   ...

இன்று தடுப்பூசி முகாம்கள் : 30.06.2021 இன்று தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில்

படம்
  தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் 30.06.2021 அன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் - மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்  தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய்  கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர்  விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.  நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில 30.06.2021 அன்று தடுப்பூசி முகாம்கள் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இடங்கள்   தூத்துக்குடி மாநகராட்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி - தூத்துக்குடி, புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - பாளை ரோடு, மாநகர ஆரம்ப சுகாதார நிலையம் - கணேஷ் நகர், மாநகர ஆரம்ப சுகாத...