இடுகைகள்

தூத்துக்குடியில். கன மழையால். பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நிவாரண உதவி

படம்
   தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நவம்பர் மாதம் 7-ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல் சென்னை மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.   இன்று (2.12.2021) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கனமழை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும், மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரணப் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள...

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு .க .ஸ்டாலின் அவர்கள் மழை நீரால் பாதிக்கப்பட்ட. தூத்துக்குடி பகுதிகளை நேரில் ஆய்வு

படம்
 தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பிரைட் நகர் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட சேதங்களை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வெள்ள நீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு. க ஸ்டாலின்,  அவர்கள் உத்தரவிட்டார்

கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள்

படம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளுக்கும் மேலும் சுற்றுலா துறையின் மூலம் ரூ.1 கோடி கோவில்பட்டி வட்டம் கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வெட்டுவாண் கோவில் முதல்;;;;;;;;;;;;; உச்சி பிள்ளையார் கோவில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட ஆகிய பணிகளுக்கு மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதாஜீவன் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.  -------------------- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் காமநாயக்கன்பட்டி ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கும் பணிகளுக்கும் மேலும் சுற்றுலா துறையின் மூலம் ரூ.1 கோடி கோவில்பட்டி வட்டம் கழுகுமலை பேரூராட்சிக்கு உட்பட்ட வெட்டுவாண் கோவில் முதல்;;;;;;;;;;;;; உச்சி பிள்ளையார் கோவில் வரை கைப்பிடிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் உள்ளிட்ட ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர...

பெண்ணின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்து, அவதூறு பரப்பிய வாலிபர் கைது

படம்
  தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண் பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல்,  அந்தப் பெண்ணின் புகைப்படத்தை முகநூலில்  பதிவேற்றம் செய்து, அவதூறு பரப்பிய வாலிபர் கைது - கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு. கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன் (28) என்பவர், செல்போனில் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமணமான இளம் பெண்ணுக்கு செல்போன் அழைப்பு விடுத்து பேசியுள்ளார். இதனையடுத்து மஞ்சுநாதன், தன்னை சகோதரனாக நினைத்து பேசுமாறு கூறி, அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார்.  நாளடைவில் அந்த பெண்ணின் முகத்தை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக மஞ்சுநாதன், அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று கடந்த மார்ச் மாதம் ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். செல்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண், தனது அடையாள அட்டையை பயன்படுத்...

மணப்பாடு மீனவர் கிராமத்தில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை : அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு மீனவர் கிராமத்தில் மீன் வளத்துறையின் மூலம்  ரூ.15.50 லட்சம் மதிப்பிட்டில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்தார்கள் ---------------------------------- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் மணப்பாடு மீனவர் கிராமத்தில் ரூ.15.50 லட்சம் மதிப்பிட்டில் மணல் திட்டினை அகற்றி நாட்டு படகுகள் கடலுக்குள் வந்து செல்வதற்கு ஏதுவாக முகத்துவாரம் அமைக்கும் பணியினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (07.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்து மணப்பாடு பகுதியில் வசிக்கும்  மீனவ மக்கள் 100 சதவிதம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தினார். அத...

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி : அமைச்சர் .அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்

படம்
  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய முதலிட்டு நிதி மற்றும்  வங்கி கிளைகள் வாரியாக 129 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி மதிப்பிலான கடன் உதவிகளையும், சமுதாய முதலிட்டு நிதியின் மூலம் 22 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் ரூ.4.72 கோடி மதிப்பிலான மாண்புமிகு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதாஆர்.ராதாகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார் ---------------------------------   தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாய முதலிட்டு நிதி மற்றும்  வங்கி கிளைகள் வாரியாக 129 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.4.64 கோடி மதிப்பிலான கடன் உதவிகளையும், சமுதாய முதலிட்டு நிதியின் மூலம் 22 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் ரூ.4.72 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.க...

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*

படம்
             தூத்துக்குடி  மாவட்டம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்       06.08.2021*        அன்று பிரையன்ட் நகர் மாடசாமி யாதவ் பத்திர காளியம்மாள் திருமண மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.* கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி  (06.08.2021)     அன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தூத்துக்குடி பிரையன்ட்நகர் மாடசாமி யாதவ் பத்திர காளியம்மாள் திருமண மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.* *♻️அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சானிடைசர், முககவசங்கள், கபசுரகுடிநீர், துண்டுபிரசுரங்கள் வழங்கியதுடன், பொதுமக்கள் முக கவசம் அண...